Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

சுதந்திரக் கட்சியை மக்கள் மறக்க வேண்டியது தான்

October 12, 2019
in News, Politics, World
0

கோட்டாபாய ராஜபக்ஷ வெற்றியடைந்தால் சுதந்திரக் கட்சி என்ற பெயரை பொதுமக்கள் மறக்க வேண்டிய நிலையே ஏற்படும் என ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமசந்திர தெரிவித்துள்ளார்.

அத்துடன் எல்பிட்டிய பிரதேச சபைத் தேர்தலினை அடிப்படையாகக் கொண்டு எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் யார் வெற்றிபெறுவார்கள் என்பதை தீர்மானிக்க முடியாது எனவும் அவர் குறிப்பிட்டார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகமான சிறிகொத்தாவில் நேற்று(வெள்ளிக்கிழமை) ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அவர் தெரிவிக்கையில், “எல்பிட்டிய தொகுதி என்பது மிகச் சரியாக கூறுவதென்றால் மத்திய கொழும்பு ஆசனத்தைப் போன்றதாகும். எந்தவொரு அரசாங்கத்திலும் மத்திய கொழும்பில் ஐக்கிய தேசியக் கட்சி மாத்திரமே வெற்றிபெற்றிருக்கிறது. அதேபோன்று எல்பிட்டிய தொகுதியில் எதிரணியினர் தான் வெற்றி பெறுவார்கள் என்பதை உறுதியாகக் கூறமுடியும்.

நாங்கள் அந்தத் தொகுதியில் தோல்வியடைவோம் என்பதும் அறிந்த விடயமே. எனினும் சிறியளவிலான இந்தத் தேர்தலை அடிப்படையாகக் கொண்டு ஜனாதிபதித் தேர்தலில் யார் வெற்றி பெறுவார்கள் என்பதைத் தீர்மானிக்க முடியாது” என்று அவர் குறிப்பிட்டார்.

மேலும், “தந்தை இருக்கும் இடத்திற்கே மகனையும் அனுப்பிவிடுவோம் என்று விமல் வீரவன்ச மிகவும் தவறான கருத்தொன்றைக் கூறியிருந்தார். இவ்வாறு பிறரை அச்சுறுத்தி, வன்முறைகளைப் பிரயோகித்து அரசியல் செய்வதே அவர்களுடைய பழக்கமாகும்.

ஒருவேளை கோட்டாபாய ராஜபக்ஷ தேர்தலில் வெற்றியடைந்தால் அவருக்கு எதிராகப் பேசுகின்றவர்களின் வாயில் துப்பாக்கிப் பிரயோகம் நடத்துவார்கள். அவ்வாறானதொரு சூழ்நிலையே தற்போது இருக்கின்றது.

இம்முறை தேர்தலில் சஜித் பிரேமதாச வெற்றியடைந்தால் மாத்திரமே சுதந்திரக் கட்சியும் பாதுகாக்கப்படும். ஏனெனில் அவர் பழிவாங்கும் குணமற்றவர் என்பதால் மீண்டும் சுதந்திரக்கட்சி உறுப்பினர்கள் தலைநிமிர்ந்து செயற்பட முடியும்.

ஆனால் கோட்டாபாய ராஜபக்ஷ வெற்றியடைந்தால் சுதந்திரக் கட்சி என்ற பெயரை பொதுமக்கள் மறக்க வேண்டிய நிலையே ஏற்படும் என்றும் அவர் இதன்போது கூறினார்.

Previous Post

கோத்தாபய ராஜபக்ஷ இன்று நாடு திரும்பினார்

Next Post

முஸ்லிம்களின் வாக்கில்லாமல் யாரும் ஜனாதிபதியாக முடியாது

Next Post

முஸ்லிம்களின் வாக்கில்லாமல் யாரும் ஜனாதிபதியாக முடியாது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures