Thursday, August 28, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

சுதந்திரக்கட்சி – ஐ.தே.க இணக்கப்பாடு தொடர்பில் ஆராய சரத் அமுனுகம!

April 15, 2018
in News, Politics, World
0

சுதந்திரக்கட்சி – ஐ.தே.க இணக்கப்பாடு தொடர்பில் ஆராய சரத் அமுனுகம!
தேசிய அரசாங்கத்தின் எதிர்கால செயற்பாடுகள் தொடர்பில் ஆராய்வதற்காக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் அமைச்சர் சரத் அமுனுகம நியமிக்கப்பட்டுள்ளார்.

ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி மற்றும் ஐக்கிய தேசியக் கட்சிக்கு இடையிலான இணக்கப்பாடுகள் தொடர்பில் ஆராய்வது இதன் நோக்கம் என ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர் ஒருவர் குறிப்பிட்டார்.

அத்துடன், ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மற்றும் ஐக்கிய தேசியக் கட்சிக்கு இடையிலான புரிந்துணர்வு உடன்படிக்கை தொடர்பில் கவனம் செலுத்தும் பொறுப்பும் சரத் அமுனுகமவிற்கு வழங்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் தவிசாளர் மலிக் சமரவிக்ரமவிடம் வினவியபோது, இது தொடர்பிலான ஐக்கிய தேசியக் கட்சியின் யோசனைகளையும் முன்வைக்கவுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

ஜனாதிபதியின் லண்டன் விஜயம் நிறைவடைந்த பின்னர் உடன்படிக்கை கைச்சாத்திடப்படவுள்ளதாக மலிக் சமரவிக்ரம தெரிவித்தார்.

எவ்வாறாயினும், தேசிய அரசாங்கத்தில் இருந்து விலகுவதற்காக ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய செயற்குழுவிற்கு பிரேரணை முன்வைக்கப்பட்டுள்ள பின்புலத்திலேயே இரு தரப்பினருக்கும் இடையிலான புரிந்துணர்வு உடன்படிக்கைக்கான ஏற்பாடுகள் இடம்பெறுகின்றன.

இதேவேளை, பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவர் பதவி தமக்கு கிடைக்க வேண்டும் என ஒன்றிணைந்த எதிர்க்கட்சி கோரிக்கை முன்வைத்துள்ளது.

இவை அனைத்திற்கும் மத்தியில் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமைத்துவம் உள்ளிட்ட அனைத்து பதவிகளுக்குமான உறுப்பினர்கள் மாற்றப்பட வேண்டும் என கட்சியின் பின்வரிசை உறுப்பினர்கள் பகிரங்கமாக கூறி வருகின்றனர்.

Previous Post

வலி.வடக்கில் வீட்டுத்தளபாடங்கள் களவாடப்படும் சம்பவங்கள் அதிகரிப்பு!

Next Post

பிரபாகரனின் நேரடி கண்காணிப்பில் 22249 விடுதலைப் புலிகள் எனும் படைப் பிரிவு

Next Post

பிரபாகரனின் நேரடி கண்காணிப்பில் 22249 விடுதலைப் புலிகள் எனும் படைப் பிரிவு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures