Tuesday, September 9, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

சீனாவின் பலூன் 200 அடி உயரமானது; விமானத்தின் எடை அளவு பொருட்களை சுமந்து செல்லக்கூடியது அமெரிக்கா தெரிவிப்பு

February 8, 2023
in News, World, முக்கிய செய்திகள்
0
சீனாவின் பலூன் 200 அடி உயரமானது; விமானத்தின் எடை அளவு பொருட்களை சுமந்து செல்லக்கூடியது அமெரிக்கா தெரிவிப்பு

அமெரிக்காவினால் சுட்டுவீழ்த்தப்பட்ட சீனாவின் பலூன் சுமார் 200 அடி (60 மீற்றர்) உயரமானது எனவும் ஒரு விமானத்தின் எடை அளவு பொருட்களை சுமந்து செல்லக்கூடியது எனவும் அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கனடா ஊடாக அமெரிக்க வான் பரப்புக்குள் கடந்த வாரம் புகுந்த மேற்படி பலூன் சீனாவின் உளவு பலூன் என அமெரிக்கா குற்றம் சுமத்தியது.

எனினும், அது காலநிலை ஆய்வு உட்பட சிவில் நோக்கங்களுக்காக பயன்படுத்தப்பட்ட பலூன் எனவும் கடும் காற்றினால் இழுத்துச் செல்லப்பட்டு அமெரிக்காவுக்குள் புகுந்துள்ளது எனவும் சீனா தெரிவித்தது.

இந்த பலூன் அமெரிக்கப் பெருநிலப்பரப்பை கடந்து சென்று, கடந்த சனிக்கிழமை அத்திலாந்திக் சமுத்திரத்துக்கு மேலாக பறந்துகொண்டிருந்தபோது அமெரிக்க போர் விமானத்தினால் சுட்டு வீழ்த்தப்பட்டது.

பலூனின் சிதைவுகளை மீட்டு, ஆய்வுக்கு உட்படுத்த அமெரிக்க அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.

அமெரிக்கப் பாதுகாப்புப் படைகளின் வட பிராந்திய கட்டளைப் பணியகத்தின் தளபதி ஜெனரல் கிளென் வான்ஹேர்;க் இது தொடர்பாக கூறுகையில், இந்த பலூன் 200 அடி (60 மீற்றர்) உயரமானதுடன், பல்லாயிரம் இறாத்தல் பொருட்களை, அதாவது ஒரு ஜெட் விமானத்தின் எடை அளவு பொருட்களை சுமந்துசெல்லக்கூடியது எனவும் கூறியுள்ளார்.

பலூன் சுட்டு வீழ்த்தப்பட்மைக்கு சீனா கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

இதேவேளை, பலூனின் சிதைவுகளை சீனாவிடம் ஒப்படைக்கும் நோக்கம் இல்லை என அமெரிக்காவின் தேசிய பாதுகாப்புப் பேரவையின் பேச்சாளர் ஜோன் கேர்பி கூறியுள்ளார்.

Previous Post

பூகம்பம் – 23 மில்லியனிற்கும் அதிகமானவர்கள் பாதிக்கப்பட்டிருக்கலாம் என அச்சம்

Next Post

பூகம்பத்தையடுத்து சிரியாவின் சிறையிலிருந்து 20 ஐஎஸ் கைதிகள் தப்பியோட்டம்

Next Post
பூகம்பத்தையடுத்து சிரியாவின் சிறையிலிருந்து 20 ஐஎஸ் கைதிகள் தப்பியோட்டம்

பூகம்பத்தையடுத்து சிரியாவின் சிறையிலிருந்து 20 ஐஎஸ் கைதிகள் தப்பியோட்டம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures