Tuesday, August 26, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

சிவில் யுத்தம் போல பொருளாதார யுத்தத்தையும் ஜனாதிபதி வெற்றிகொள்வாராம் | பவித்ரா பேச்சு

March 1, 2022
in News, Sri Lanka News
0
கோத்தபாயவே உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் சூத்திரதாரியா?

சிவில் யுத்தத்தை வெற்றிக்கொண்டதை போன்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பொருளாதார யுத்தத்தையும் சிறந்த முறையில் வெற்றிக்கொள்வார். எரிபொருள் பற்றாக்குறை காரணமாக பொதுபோக்குவரத்து சேவை எந்நிலையிலும் பாதிக்கப்படாது என போக்குவரத்து துறை அமைச்சர் பவித்ராதேவி வன்னியராட்சி தெரிவித்தார்.

இரத்தினபுரி பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வில் கலந்துக்கொண்டு உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

நல்லாட்சி அரசாங்கத்தினால் பலவீனமடைந்த பொருளாதாரத்தையே பொறுப்பேற்றோம். அரசியல் முரண்பாடுகளின் காரணமாக தேசிய பாதுகாப்பு திட்டமிட்ட வகையில் பலவீனப்படுத்தப்பட்டது. தேசிய பாதுகாப்பு பலவீனத்தை அடிப்படைவாதிகள் சாதகமாக பயன்படுத்திக்கொண்டார்கள்.

பாரிய எதிர்பார்ப்பிற்கு மத்தியில் நாட்டு மக்கள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் ஆட்சிமாற்றத்தை ஏற்படுத்தினார்கள். கொவிட்-19 பெருந்தொற்று பரவல் அரசாங்கத்தின் செயற்பாட்டிற்கு பாரிய தடையாக காணப்பட்டது. வைரஸ் தொற்றிலிருந்து நாட்டு மக்களை பாதுகாக்க அரசாங்கம் முன்னுரிமை வழங்கியது.

கொவிட்-19 வைரஸ் தாக்கத்தின் பின்னரான காலப்பகுதியில் தேசிய பொருளாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. சிவில் யுத்தத்தை வெற்றிக்கொண்டதை போன்று ஜனாதிபதி பொருளாதார யுத்தத்தையும் வெற்றிக்கொள்வார். நடைமுறையில் தோற்றம் பெற்றுள்ள பிரச்சினைகளை முகாமைத்துவம் செய்ய அரசாங்கம் உரிய நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.

2024 ஆம் ஆண்டுக்கு பிறகும் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவே ஆட்சியமைக்கும். நடைமுறையில் தோற்றம் பெற்றுள்ள பிரச்சினைகள் அரசாங்கத்தின் இருப்பிற்கு எவ்வித பாதிப்பையும் ஏற்படுத்தாது என்பதை தெளிவாக குறிப்பிட்டுக்கொள்ள வேண்டும்.

எரிபொருள் பற்றாக்குறை காரணமாக பொதுபோக்குவரத்து சேவை பாதிக்கப்படும் என எதிர்தரப்பில் அரசியல் பிரசாரம் செய்துக்கொள்கிறார்கள். பொதுபோக்குவரத்து சேவைக்கான எரிபொருள் முழுமையாக விநியோகிக்கப்பட்டுள்ளது. எந்நிலையிலும் பொதுபோக்குவரத்து சேவைக்கு பாதிப்பு ஏற்படாது என்றார்.

Previous Post

எரிபொருளை பெற்றுக்கொள்வதில் நெருக்கடிய எதிர்கொள்ளும் கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்ட மக்கள்

Next Post

பொருளாதார நெருக்கடியிலிருந்து மீள சர்வதேசத்தின் ஆதரவு வேண்டும் | கரு ஜயசூரிய

Next Post
மக்கள் பொறுப்புடன் செயற்பட்டாலே டெல்டா வைரஸிலிருந்து மீள முடியும்

பொருளாதார நெருக்கடியிலிருந்து மீள சர்வதேசத்தின் ஆதரவு வேண்டும் | கரு ஜயசூரிய

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures