Saturday, September 6, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home Cinema

சிலம்பரசனின் ‘பத்து தல’ படத்தின் படப்பிடிப்பு நிறைவு

March 8, 2023
in Cinema, News
0
நடிகர் சிம்பு மருத்துவமனையில் அனுமதி

சிலம்பரசன் கதையின் நாயகனாக நடித்து வரும் ‘பத்து தல’ படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்தது என படக் குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறார்கள்.

இயக்குநர் என். கிருஷ்ணா இயக்கத்தில் தயாராகி வரும் புதிய திரைப்படம் ‘பத்து தல’. இதில் சிலம்பரசன் கதையின் நாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக பிரியா பவானி சங்கர் நடித்திருக்கிறார். இவர்களுடன் கௌதம் கார்த்திக், கௌதம் வாசுதேவ் மேனன், கலையரசன், டிஜே அருணாச்சலம், அனு சித்தாரா உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். பாரூக் ஜே. பாஷா ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ‘இசைப்புயல்’ ஏ. ஆர். ரகுமான் இசையமைத்திருக்கிறார். எக்சன் என்டர்டெய்னர் ஜேனரில் தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை ஸ்டுடியோ கிரீன் மற்றும் பென் ஸ்டுடியோஸ் ஆகிய பட நிறுவனங்கள் சார்பில் கே.ஈ. ஞானவேல் ராஜா மற்றும் ஜெயந்திலால் காடா ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கிறார்கள்.

இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக், டீசர், பாடல்கள் ஆகியவை வெளியாகி பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. அண்மையில் வெளியிடப்பட்ட இப்படத்தின் டீசர் பதினொரு மில்லியனுக்கும் மேற்பட்ட பார்வையாளர்களால் பார்வையிடப்பட்டு சாதனை படைத்து வருகிறது. இந்த திரைப்படத்தில் நடிகை திருமதி சாயிஷா ஆர்யா முக்கிய வேடத்தில் நடித்திருக்கிறார். இதற்கான படப்பிடிப்பு அண்மையில் நடைபெற்றது. இதனைல் தொடர்ந்து இப்படத்தின் படப்பிடிப்பு முழுமையாக நிறைவடைந்தது என படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறார்கள்.

படத்தைப் பற்றி இயக்குநர் கிருஷ்ணா பேசுகையில், “முஃப்தி எனும் கன்னட படத்தின் ரீமேக் என்றாலும், தமிழ் சூழலுக்கு ஏற்ற வகையில் சில மாற்றங்களை செய்து ‘பத்து தல’ படத்தை உருவாக்கி இருக்கிறோம். தற்போது சிலம்பரசன் தற்காப்பு கலை ஒன்றை பயில்வதற்காக தாய்லாந்து நாட்டில் முகாமிட்டிருக்கிறார். இந்த பயிற்சி இம்மாதம் 15ஆம் திகதியன்று நிறைவடைகிறது. அதன் பிறகு தாயகம் திரும்பியவுடன் இப்படத்தின் இசை வெளியீடு பிரம்மாண்டமாக நடைபெறும். மேலும் இந்த திரைப்படத்திற்காக திருமதி சாயிஷா ஆர்யா ஒரேயொரு பாடலுக்கு நடனமாடுகிறார். அதற்கான படப்பிடிப்பும் தற்போது நிறைவடைந்திருக்கிறது.. இந்தப் படம் மார்ச் 30ஆம் திகதியன்று வெளியாகிறது.” என்றார்.

Previous Post

ஜனாதிபதியின் உரை தொடர்பில் விவாதம் தேவை | சஜித்

Next Post

3 விக்கெட்டுக்களால் வெற்றியீட்டிய இங்கிலாந்து அணி, இரண்டாவது போட்டியில் 132 ஓட்டங்களால் வெற்றி

Next Post
3 விக்கெட்டுக்களால் வெற்றியீட்டிய இங்கிலாந்து அணி, இரண்டாவது போட்டியில் 132 ஓட்டங்களால் வெற்றி

3 விக்கெட்டுக்களால் வெற்றியீட்டிய இங்கிலாந்து அணி, இரண்டாவது போட்டியில் 132 ஓட்டங்களால் வெற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures