Monday, August 25, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

சிறையில் தன்னை யாரும் துன்புறுத்தவில்லை

January 4, 2018
in News, Politics, World
0

சிறையில் தன்னை யாரும் துன்புறுத்தவில்லை என்று பாகிஸ்தான் சிறையில் இருக்கும் இந்திய முன்னாள் கடற்படை அதிகாரி குல்பூஷண் ஜாதவ் தெரிவித்துள்ளார்.

உளவு பார்த்த புகாரின் பெயரில் பாகிஸ்தான் சிறையில் அடைக்கப்பட்டுள்ள குல்பூஷண் ஜாதவ் சித்தரவதைக்கு ஆளாக்கப்பட்டுள்ளதாக இந்தியா குற்றம்சாட்டியது. இதனை மறுக்கும் விதமாக குல்பூஷண் பேசிய உள்ள புதிய வீடியோவை பாகிஸ்தான் வெளியிட்டுள்ளது.

அதில் சிறையில் தாம் நலமுடன் இருப்பதாக குல்பூஷண் ஜாதவ் தெரிவித்துள்ளார்.

மேலும் பாகிஸ்தானில் மகிழ்ச்சியாகவும் நலமாகவும் உள்ளேன். எனது குடும்பத்தினரை சந்திக்க அனுமதி கொடுத்ததற்கு பாகிஸ்தானுக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன்.

பாகிஸ்தானில் யாரும் என்னை துன்புறுத்தவில்லை. இந்த சந்திப்பு மூலம் பாகிஸ்தான் நேர்மறையான தகவலை அளித்துள்ளது.

எனது தாயாரை சந்தித்தது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. தனது குடும்பத்தினருடனான சந்திப்புக்கு ஏற்பாடு செய்த பாகிஸ்தான் அரசுக்கு ஜாதவ் நன்றி தெரிவித்த வீடியோ கடந்த வாரம் வெளியானது குறிப்பிடத்தக்கது.

தற்போது ஜாதவை கட்டாயப்படுத்தி வீடியோவில் பேச வைத்திருப்பதாக இந்தியா தரப்பில் குற்றம்சாட்டப்பட்டுள்ளது. குல்பூஷண் ஜாதவ் குற்றச்சாட்டுநான் இந்திய கடற்படை அதிகாரியாக இருந்தவன்.

தாய் மற்றும் மனைவி என்னைச் சந்திக்க வந்தபோது அவர்களின் கண்களில் அச்சத்தைப் பார்த்தேன்.

இருவரையும் மிரட்டி இந்திய அதிகாரிகள் பாகிஸ்தானுக்கு அழைத்து வந்ததாக நான் உணர்கிறேன்.

மேலும் என்னைச் சந்தித்துவிட்டு திரும்பிய இருவரையும், இந்திய தூதரக அதிகாரிகள் மிரட்டியதை நான் பார்த்தேன் ஜாதவ் தெரிவித்துள்ளார்.

ஏன் அவர்கள் அப்படி நடந்து கொள்ள வேண்டும் என குல்பூஷண் ஜாதவ் கேள்வி எழுப்பியுள்ளார். இதுவும் பாகிஸ்தானின் மற்றொரு ஏமாற்று வேலை என ஆய்வாளர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

Previous Post

ஆர்ப்பாட்டத்தின் போதான உயிரிழப்புகளை ஏற்க முடியாது

Next Post

மக்களுக்காக பல தடவைகள் சிறை சென்று வந்தவரே மாவை!

Next Post
மக்களுக்காக பல தடவைகள் சிறை சென்று வந்தவரே மாவை!

மக்களுக்காக பல தடவைகள் சிறை சென்று வந்தவரே மாவை!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures