Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

சிறைச்சாலை அதிகாரி கைது!

October 18, 2025
in News, Sri Lanka News, முக்கிய செய்திகள்
0
மட்டக்களப்பு நகரில் ஐஸ் போதை பொருள்களுடன் இரு இளைஞர்கள் கைது

களுத்துறை சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள கைதி ஒருவருக்கு போதைப்பொருட்களை கொடுப்பதற்கு பெண் ஒருவருக்கு உடந்தையாக இருந்த சிறைச்சாலை அதிகாரி களுத்துறை வடக்கு பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார். 

வஸ்கடுவ பிரதேசத்தில் வசிக்கும் 53 வயதுடைய சிறைச்சாலை அதிகாரியே கைதுசெய்யப்பட்டுள்ளார். 

களுத்துறை சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள கைதி ஒருவருக்கு ஐஸ், ஹெரோயின் உள்ளிட்ட போதைப்பொருட்களும் கையடக்கத் தொலைபேசியையும் கொடுக்க முயன்ற பெண் ஒருவர் சிறைச்சாலை அதிகாரிகளால் அண்மையில் கைதுசெய்யப்பட்டிருந்தார். 

கைதுசெய்யப்பட்ட பெண்ணிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் அதே சிறைச்சாலையில் கடமையாற்றும் சிறைச்சாலை அதிகாரி ஒருவர் கைதிக்கு போதைப்பொருட்களை கொடுக்க உடந்தையாக இருந்ததாகவும் அவருக்கு 35 ஆயிரம் ரூபா பணம் வழங்கியதாகவும் தெரியவந்துள்ளது.

இதனையடுத்து சந்தேக நபரான சிறைச்சாலை அதிகாரி கைதுசெய்யப்பட்டுள்ளார். 

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை களுத்துறை வடக்கு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Previous Post

சுபீட்சமான இலங்கைக்காக இந்தியா உள்ளிட்ட சர்வதேச சமூகத்துடன் இணைந்து பணியாற்ற அரசாங்கம் தயார் – இந்தியாவில் பிரதமர் ஹரிணி

Next Post

ஒரு பவுண் நான்கு இலட்சம்? இன்றைய தங்க விலை நிலைவரம்!

Next Post
தங்க விலையில் சடுதியான மாற்றம் : வாங்கவுள்ளோருக்கு மகிழ்ச்சி தகவல்

ஒரு பவுண் நான்கு இலட்சம்? இன்றைய தங்க விலை நிலைவரம்!

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures