சிறுமிகளுடன் பாலியல் உறவு வைத்துக் கொண்டது நிரூபிக்கப்பட்டதால், இரண்டு பேருக்கு தலா 100 சவுக்கு அடி தண்டனை கொடுக்கப்பட்டது. இந்த அதிரடி தண்டனை இந்தோனேசியா நாட்டில் நிறைவேற்றப்பட்டது.
இஸ்லாமியர்கள் அதிக அளவில் வசிக்கும் இந்தோனேஷியாவில், பாலியல் வன் கொடுமை, போதைப் பொருட்கள் கடத்துதல் போன்ற குற்றங்களுக்கு கடுமையான தண்டனை வழங்கப்பட்டு வருகிறது. இஸ்லாம் மதத்திற்கு எதிரான குடி, சூதாட்டம், ஓரினச்சேர்க்கை, கள்ளத்தொடர்பு உள்ளிட்ட செயல்களில் ஈடுபவர்களுக்கு இஸ்லாமிய சட்டப்படி (ஷாரியா) சவுக்கு அடி தண்டணை வழங்கப்படுகிறது.
இந்த நிலையில், அவ்வப்போது பூகப்ப பாதிப்புகளுக்கு உள்ளாகும் இந்தோனேஷியாவின் சுமத்திரா தீவுகளில் உள்ள ஆர்ச்சே மாகாணத்தில், லோக்சுமாவே நகரில் சிறுமிகளுடன் தகாத உறவு வைத்துக் கொண்டதாக இரண்டு பேர் மீது குற்றம் சாட்டப்பட்டது. இது தொடர்பாக விசாரணை நடைபெற்று வந்த நிலையில், அவர்கள் 2 பேருக்கும், தலா 5 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் 100 சவுக்கு அடி வழங்க தீர்ப்பு கூறப்பட்டது.
அதைத்தொடர்ந்து, அவர்கள் 2 பேருக்கும் பொதுமக்களின் முன்னிலையில் நேற்று 100 சவுக்கு அடி கொடுத்து தண்டனை நிறைவேற்றப்பட்டது. ரத்தம் சொட்ட சொட்ட அவர்களுக்கு வழங்கப்பட்ட சவுக்கடி பெரும் சோகத்தையும், பரபரப்பை ஏற்படுத்தியது.

