Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

சிங்களவர், கிறிஸ்தவர் வாக்குகளினால் கோத்தபய வெற்றிபெறுவார்!!

November 4, 2019
in News, Politics, World
0
ஐக்­கிய தேசிய கட்சி ஆட்­சியில் இருக்­கின்­ற­மைக்கு தமிழ் தேசிய கூட்­ட­மைப்பே காரணம். ஆகவே தமிழ்த் தேசிய கூட்­ட­மைப்பு என்ன  கோரிக்­கை­களை முன்­வைத்­தாலும் அதற்கு  ஐக்­கிய தேசிய கட்சி தலை சாய்க்கும் என்று எதி­ர­ணியின் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் விஜ­ய­தாச ராஜபக்ஷ தெரி­வித்தார்.
கடந்த  2015 ஆம் ஆண்டு ஜனா­தி­பதி தேர்­தலை  சிறு­பான்மை மக்­களின் வாக்­குகள் தீர்­மா­னித்­தாலும் கூட  இம்­முறை தேர்­தலில் அது நடக்­காது. பெரும்­பான்மை வாக்­கு­களில் கோத்­தா­பாய ராஜபக் ஷ வெற்றி பெறுவார். ஆனாலும்  இதில் கிறிஸ்­தவ மக்­களின் முழு­மை­யான வாக்­குகள் கோத்­தா­பய ராஜபக் ஷவிற்கு கிடைக்கும் எனவும் அவர் கூறினார்.
நிகழ்­கால அர­சியல் நகர்­வுகள் குறித்து வின­விய போதே அவர் இதனைக் குறிப்­பிட்டார்.
மேலும்  குறிப்­பி­டு­கையில், இந்த அர­சாங்கம் ஆட்­சிக்கு வந்த காலத்தில் இருந்து நிலங்­களை சர்­வ­தே­சத்­திற்கு விற்கும் கொள்கை மட்­டுமே கையா­ளப்­பட்­டது. உடன்­ப­டிக்­கைகள் மூல­மாக துறை­மு­கங்கள், காணிகள் சர்­வ­தேச நாடு­க­ளுக்கு கொடுக்­கப்­பட்­டன. இதில் பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­கவின் தனிப்­பட்ட தீர்­மா­னங்­களே அதி­க­மாக இருந்­தன. எனினும் நான் சிறிது காலம் பொறுத்­துக்­கொண்டு அர­சாங்­கத்தில் இருந்தேன். ஜனா­தி­பதி கேட்­டுக்­கொண்ட கார­ணி­க­ளுக்கு அமைய கல்வி அமைச்­சினை பொறுப்­பேற்று அதன் பிரச்­சி­னை­க­ளுக்கு தீர்­வு­களை பெற்­றுக்­கொ­டுக்கும் நட­வ­டிக்கை எடுத்தேன்.
இந்த அர­சாங்­கத்தில் உள்ள அமைச்­ச­ரவை மிகவும் பல­வீ­ன­மான அமைச்­ச­ர­வை­யாகும். நாட்­டுக்கும் மக்­க­ளுக்கும் தேசிய கொள்­கைக்கும் அமை­வாக எந்த தீர்­மா­னமும் எடுக்­க­வில்லை. ஒரு சில அமைச்­சர்கள் தமக்கு தேவை­யான நபர்கள் குறித்து அவர்­க­ளுக்கு சாத­க­மாக செய்ய வேண்­டிய விட­யங்கள், நிலங்­களை விற்கும் நட­வ­டிக்­கைகள் என்­பது குறித்து மட்­டுமே பேசினர். ஹம்­பாந்­தோட்டை துறை­முகம் விற்­கப்­பட்­டி­ருக்­கா­விட்­டி­ருந்தால் ஈஸ்டர் தாக்­குதல் இடம்­பெற்­றி­ருக்­காது. ஈஸ்டர் தாக்­குதல் இடம்­பெற  பிர­தான இரண்டு கார­ணிகள் உள்­ளன. தகு­தி­யற்ற பொலிஸ்மா அதிபர் ஒரு­வரை நிய­மித்­த­துடன்   ஒரு­சில மோச­மான அதி­கா­ரி­க­ளுக்கு பொறுப்­புக்­களை கொடுத்­தனர். அர­சி­ய­ல­மைப்பு சபையில் நான் அப்­போதும் எதிர்த்தேன். எனினும் பிர­தமர் என்னை தடுத்தார். ஜனா­தி­ப­தியும் தவறு செய்­துள்ளார். ஹேம­சிறி பெர்­னாண்­டோ­விற்கு அதி­கா­ரத்தை கொடுத்­தமை தவ­றாகும்.
  அம்­பாந்­தோட்டை துறை­மு­கத்தை சீனா­வுக்கு கொடுத்து பல நாடு­களின் எதிர்ப்பை சம்­பா­தித்­துக்­கொண்டோம். இந்­தியா, ஐரோப்­பிய ஒன்­றியம், ஜப்பான், அமெ­ரிக்கா ஆகிய அனைத்து நாடு­களும் ஒரு அணி­யாகி இலங்­கைக்கு எதி­ராக செயற்­பட்­டன . இலங்­கைக்குள் குழப்­பங்­களை ஏற்­ப­டுத்­தவும் இதுவே காரணம். சோபா உடன்­ப­டிக்­கையை இலங்­கைக்குள் கொண்­டு­வர அமே­ரிக்கா முழு­மை­யாக முயற்சி எடுத்­தது. இஸ்­லா­மிய பயங்­க­ர­வாத அமைப்­புகள் அனைத்தின் உரு­வாக்­க­தா­ரிகள் அமெ­ரிக்கா மட்­டு­மே­யாகும். அவர்­களை கொண்டு அமெ­ரிக்கா இயக்­கி­ய­மைக்கு அமை­யவே இலங்­கையில் ஈஸ்டர் தாக்­குதல் இடம்­பெற்­றது என்­பதே உண்மை. அதேபோல் தேசிய பாது­காப்பு விட­யத்தில் ஐக்­கிய தேசிய கட்சி பல­வீ­ன­மா­கி­விட்­டது. ஐக்­கிய தேசிய கட்­சி­யினால் தேசிய பாது­காப்பை கட்­டி­யெ­ழுப்ப முடி­யாது.
  தமிழ் தேசிய கூட்­ட­மைப்பு முன்­வைத்­துள்ள 13 அம்சக் கோரிக்­கைகள் மிகவும் மோச­மா­ன­வை­யாகும். இவர்கள் தொடர்ச்­சி­யாக நாட்­டினை குழப்பும் துண்­டாடும் நோக்­கத்தில் மட்­டுமே செயற்­பட்டு வரு­கின்­றனர். ஐக்­கிய தேசிய கட்சி இன்றும் ஆட்­சியில் உள்­ள­மைக்கு தமிழ் தேசிய கூட்­ட­மைப்பே காராணம். ஆகவே தமிழ் தேசிய கூட்­ட­மைப்பின் அனைத்து கோரிக்­கை­க­ளுக்கும் ஐக்­கிய தேசிய கட்சி தலை சாய்க்கும். சிறு­பான்மை கட்­சி­களின் ஆத­ரவை பெரும் கட்­சிக்கு இம்­முறை வெற்றி கிடைக்கும் என கூற முடி­யாது. கடந்த 2010 ஆம் ஆண்டு தேர்­தலில் சிறுபான்மை மக்களின் பங்களிப்பு இல்லாது மஹிந்த ராஜபக் ஷ வெற்றி பெற்றார். எனினும் 2015 ஆம் ஆண்டு தேர்தலில் சிறுபான்மை மக்களின் வாக்குகள் தீர்மானித்தது உண்மையாகும். ஆனால் இம்முறை பெரும்பான்மை வாக்குகளில் கோத்தாபாய ராஜபக் ஷ வெற்றி பெறுவார். இதில் கிறிஸ்தவ மக்களின் முழுமையான வாக்குகள் கோத்தாபய ராஜபக்ஷவிற்கு கிடைக்கும் என்றார்.
Previous Post

ஈஸ்டர் தாக்குதலின் பின்னணியிலுள்ள, பிரதான சூத்திரதாரி கோத்தபாயதான் !!

Next Post

யாழ். அரியாலையில் பொலிஸார் துப்பாக்கிச் சூடு

Next Post

யாழ். அரியாலையில் பொலிஸார் துப்பாக்கிச் சூடு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures