Saturday, September 13, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

சிங்கப்பூர் பிரதமருடன் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தனிப்பட்ட ரீதியில் பேச்சு

March 22, 2019
in News, Politics, World
0

மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜுன் மகேந்திரனை இலங்கை அழைத்து வருவது தொடர்பாக சிங்கப்பூர் பிரதமருடன் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தனிப்பட்ட ரீதியில் பேச்சுக்களை நடத்தி வருவதாக ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்த அமரவீர தெரிவித்தார்.

ஆரம்பக் கைத்தொழில் சமூக வலுவூட்டல் அமைச்சு,பொது வழங்கல் மற்றும் பொருளாதார மறுசீரமைப்புப்பற்றிய அமைச்சரவை அந்தஸ்தற்ற அமைச்சு, விசேட பிரதேசங்கள் அபிவிருத்தி பற்றிய அமைச்சரவை அந்தஸ்தற்ற அமைச்சு ஆகியவற்றுக்கான நிதி ஒதுக்கீட்டு விவாதம் நடைபெற்றது.இதில் உரையாற்றிய ஜே.வி.பி. பாராளுமன்ற உறுப்பினர் நளிந்த ஜெயதிஸ்ஸ, மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜுன் மகேந்திரனை இலங்கைக்கு அனுப்புமாறு இலங்கை அரசு முறையான ஆவணங்கள் எதனையும் இதுவரை தங்களுக்கு சமர்ப்பிக்கவில்லையென்றும் சமர்ப்பிக்கப்பட்ட சில ஆவணங்களிலும் குறைபாடுகள் காணப்படுவதாகவும் சிங்கப்பூர் அரசு தெரிவித்துள்ளதாக குற்றஞ்சாட்டினார்.

இதற்கு ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப் பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்த அமரவீர பதிலளித்தார். மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜுன் மகேந்திரனை இலங்கை அழைத்து வருவதற்காக சிங்கப்பூர் பிரதமருடன் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தனிப்பட்ட ரீதியில் பேச்சுக்களை நடத்தியிருக்கிறார். முறையான எழுத்துமூல கோரிக்கையும் முன்வைக்கப்பட்டுள்ளதுடன் இராஜதந்திர ரீதியிலான நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளது என்றும் அவர் கூறினார்.

Previous Post

3,800 மில்லியன் அமெரிக்க டொலரில் எரிபொருள் சுத்திகரிப்பு கைத்தொழிற்சாலை திட்டம்

Next Post

22,000 மெற்றிக் தொன் நெல்லை கொள்வனவு செய்துள்ள நெல் சந்தைப்படுத்தும் சபை

Next Post

22,000 மெற்றிக் தொன் நெல்லை கொள்வனவு செய்துள்ள நெல் சந்தைப்படுத்தும் சபை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures