Sunday, August 24, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

சிகரெட் புகையைவிட ஆபத்தானதா ஊதுவர்த்தி புகை

December 21, 2017
in News, Tech
0

உங்களது வீட்டில் நறுமணம் பரவ வேண்டும் என்பதற்காகவும், தியானம் செய்யும் போதும், தெய்வங்களை வணங்குவதற்காகவும் ஊதுவர்த்தி ஏற்றுவீர்கள். இதன் வாசனை உங்களுக்கு நல்ல உணர்வை கொடுத்தாலும், ஊதுவர்த்தியை அதிகமாக பயன்படுத்துவது தீய விளைவுகளை விளைவிக்கும். ஊதுவர்த்தியால் உடலுக்கு உண்டாகும் ஆபத்தான விளைவுகள் பற்றி இந்த பகுதியில் காணலாம்.

செல்களில் நச்சுத்தன்மை
ஊதுவர்த்தியின் புகையானது செல்களில் நச்சுத்தன்மையை உண்டாக்குகிறது. இது டி.என்.ஏ போன்ற மரபணு மூலக்கூறுகளை மாற்றியமைக்கலாம். இது புற்றுநோய் வளர்ச்சிக்கு பொருப்பாகிறது.

சுவாசக்கோளாறை உண்டாக்குகிறது
ஊதுவர்த்தியின் புகை சிலருக்கு இருமல் மற்றும் தும்மலை ஏற்படுத்துகிறது. இது சுவாசப்பாதைகளை நச்சுக்களை உருவாக்குகிறது. இதில் உள்ள நுண்ணிய நச்சுக்கள், மிகவும் ஆபத்தானவை.

நுரையிரல் பாதிப்பு
காற்று மாசுபடுவதினால் நுரையிரலில் எரிச்சல் ஏற்படுகிறது. இது நுரையிரல் புற்றுநோய்க்கான ஆபத்துகளை அதிகரிக்கலாம். மேலும் உடல் நலத்தையும் பாதிக்கிறது.

ஆஸ்துமா அறிகுறிகள்
காற்றை மாசுபடுத்தி, எரிச்சலூட்டுகிறது. ஆஸ்துமா நோய்க்கான அறிகுறிகளை அதிகரிக்கிறது. இருமல் போன்றவற்றிற்கு காரணமாக உள்ளது.

சரும பிரச்சனைகள்
உங்களுக்கு காற்று மாசுபாட்டினால் சருமத்தில் எரிச்சல், அலர்ஜி போன்றவை உண்டாகும் என்றால், ஊதுவர்த்தி புகை உங்களது சருமத்தின் ஆரோக்கியத்தை இழக்கச்செய்யும். இது சில சரும பிரச்சனைகளை உண்டாக்கும்.

தள்ளியே இருங்கள்
நீங்கள் கர்ப்பமாக இருந்தால், ஊதுவர்த்தி புகையை விட்டு சற்று தள்ளியே இருங்கள். இந்த புகை உங்களது சுவாசம் வழியாக சென்று கருவில் இருக்கும் குழந்தையை பாதிக்கும்.

நரம்பியல் பிரச்சனை
ஊதுவர்த்தியின் புகையில் கார்பன் மோனாக்சைடு உள்ளது. இதனை நீண்ட நாட்கள் சுவாசித்து கொண்டிருந்தால், நரம்பியல் பிரச்சனைகள் உண்டாகும். கற்றல் திறன் குறைபாடு மற்றும் நினைவாற்றல் குறையும்.

தலைவலி
நீங்கள் மன அமைதிக்காகவும், தெய்வ காரியங்களுக்காகவும் பயன்படுத்தும் இந்த ஊதுவர்த்தி, உங்களுக்கு தலைவலி மற்று தலைசுற்றல் போன்ற பிரச்சனைகளையும் கூட ஏற்படுத்தலாம்.

Previous Post

2017ஆம் ஆண்டின் மோசமான பாஸ்வேர்ட் பட்டியல் வெளியானது!

Next Post

யாழ். வைத்தியசாலையில் நடத்தப்பட்ட இதய மாற்று அறுவை சிகிச்சை

Next Post

யாழ். வைத்தியசாலையில் நடத்தப்பட்ட இதய மாற்று அறுவை சிகிச்சை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures