Monday, September 8, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

சாமியார் நித்தியானந்தாவிடமிருந்து ரணிலுக்கு வந்த கடிதம்

September 3, 2022
in News, Sri Lanka News, முக்கிய செய்திகள்
0
சாமியார் நித்தியானந்தாவிடமிருந்து ரணிலுக்கு வந்த கடிதம்

இந்தியாவின் பிரபல சாமியார் நித்தியானந்தா இலங்கையில் அடைக்கலம் கோரி ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு கடிதம் எழுதியதாக கூறப்படும் விடயம் தொடர்பில் ஜனாதிபதி ஊடகப் பிரிவின் பதில் வெளியாகியுள்ளது.

இலங்கையில் அடைக்கலம் கோரி கடிதம்
இந்தியாவின் பிரபல சாமியார் நித்தியானந்தா இலங்கையில் அடைக்கலம் கோரி, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளதாக இந்திய ஊடகங்களில் செய்திகள் வெளியாகியிருந்தன.

மருத்துவ சிகிச்சைக்காக இலங்கையில் அடைக்கலம் வழங்குமாறு நித்தியானந்தா, ஜனாதிபதியிடம் அந்த கடிதம் ஊடாக கோரிக்கை விடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.

தனது உடல் நிலை மோசமாக இருப்பதாகவும் உயிருக்கு ஆபத்தான நிலைமையில் இருப்பதாகவும் நிந்தியானந்தா கடிதத்தில் கூறியுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டிருந்தது.

அத்துடன் சிகிச்சைக்கான முழு செலவையும் தனது சொர்க்கபூமியான கைலாசா ஏற்றுக்கொள்ளும் எனவும் நித்தியானந்தா தனது கடிதத்தில் கூறியுள்ளார் எனவும் குறிப்பிடப்பட்டிருந்தது.

ஜனாதிபதி ஊடகப் பிரிவின் பதில்
இந்த விடயம் தொடர்பில் ஜனாதிபதி ஊடகப் பிரிவிடம் ஊடகமொன்று வினவியுள்ளது.

இதன்போது, நித்தியானந்தாவிடம் இருந்து எந்த கடிதங்களும் கிடைக்கவில்லை. அத்துடன் இந்த செய்தியில் உண்மையில்லை என்று பதில் வழங்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.

இதேவேளை நித்தியானந்தா, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு கடிதம் அனுப்பியுள்ளதாக வெளியாகியுள்ள செய்தி குறித்து ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு உயர் அதிகாரியொருவரிடம் கேட்ட போது, இந்த கடிதம் குறித்து எதுவும் தெரியாது எனக் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் இவ்வாறு நாடு ஒன்றில் அடைக்கலம் கோர வேண்டுமாயின் அந்த நாட்டின் ஐக்கிய நாடுகள் அலுவலகத்துடனே தொடர்பு கொள்ள வேண்டும் எனவும் மாறாக ஜனாதிபதிக்கு கடிதம் அனுப்ப வேண்டியதில்லை எனத் தெரியவருகிறது.

மேலும், சட்ட ரீதியாக நாட்டுக்குள் பிரவேசிக்க வேண்டுமாயின் குடிவரவு குடியகழ்வு திணைக்களத்தின் ஊடாக ஆவணங்களை சமர்ப்பித்து வீசா பெற்றுக் கொள்ள முடியும் என இதுகுறித்து விசாரித்தபோது குடிவரவு குடியகல்வு அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Previous Post

யோகி பாபுவின் ‘யானை முகத்தான்’

Next Post

அமெரிக்க ஓபன் டென்னிஸ் | 3வது சுற்றில் ஆண்டி முர்ரேவை வீழ்த்தினார் பெரேட்டினி

Next Post
அமெரிக்க ஓபன் டென்னிஸ் | 3வது சுற்றில் ஆண்டி முர்ரேவை வீழ்த்தினார் பெரேட்டினி

அமெரிக்க ஓபன் டென்னிஸ் | 3வது சுற்றில் ஆண்டி முர்ரேவை வீழ்த்தினார் பெரேட்டினி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures