Thursday, August 28, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

சாணக்கியம் மிக்க மென்வலுத்தலைவர் சம்பந்தன் | சிறிதரன் எம்.பி

July 13, 2025
in News
0
சாணக்கியம் மிக்க மென்வலுத்தலைவர் சம்பந்தன் | சிறிதரன் எம்.பி

அரசியல் முதிர்ச்சியும், சாணக்கியமும், எல்லாத் தரப்பினரையும் அரவணைத்துச் செல்லும் தலைமைத்துவ ஆளுமையும் மிக்கவராக, தன் இறுதிக்கணம் வரை தமிழ்த்தேசியத் தளத்தில் பயணித்த அரசியல்வாதியும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமாகிய  இராஜவரோதயம் சம்பந்தன் வெற்றிடம், ஈழத்தமிழர்களின் இனவிடுதலை நோக்கிய அறவழிப் போராட்டப் பயணத்தில் காலவெளியால் நிரப்ப முடியாத வெற்றிடம் என நாடாளுமன்ற உறுப்பினரும், இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் நாடாளுமன்றக் குழுத் தலைவருமான சிவஞானம் சிறிதரன் தெரிவித்துள்ளார்.

இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி கிளிநொச்சி மாவட்டக் கிளையினால் கட்சியின் மாவட்டக் கிளைப் பணிமனையில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன்  முதலாம் ஆண்டு நினைவுதினத்தை முன்னிட்டு ஒழுங்கமைக்கப்பட்ட அஞ்சலி நிகழ்வில் அன்னாரது திருவுருவப் படத்திற்கு மலர்மாலை அணிவித்து, நினைவுரை ஆற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

பச்சிலைப்பள்ளி பிரதேச சபையின் தவிசாளர்  சுப்பிரமணியம் சுரேன் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், கரைச்சி பிரதேச சபையின் மேனாள் உறுப்பினரும், ஆசிரியருமான அருணாசலம் சத்தியானந்தம், கட்சியின் கிளிநொச்சி மாவட்டக் கிளை உப தலைவரும் மேனாள் கல்வி அமைச்சருமான தம்பிராஜா குருகுலராஜா, நாடாளுமன்ற  உறுப்பினர்  சிவஞானம் சிறீதரன் ஆகியோர் நினைவுரைகளை ஆற்றியிருந்ததுடன், மாவட்டக் கிளையின் செயலாளர் வீரவாகு விஜயகுமார், கரைச்சி, பூநகரி, பச்சிலைப்பள்ளி பிரதேச சபைகளின் தவிசாளர்கள், உப தவிசாளர்கள், உறுப்பினர்கள், மேனாள் உறுப்பினர்கள், மாவட்டக் கிளை உறுப்பினர்கள் மற்றும் வட்டாரக் கிளைகளின் நிருவாக உறுப்பினர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Previous Post

செம்மணியில் புதைக்கப்பட்ட பச்சிளம் குழந்தைகள்: தமிழரசுக் கட்சியிடமிருந்து அநுரவிற்கு கடிதம்

Next Post

ஈழ அகதி முகாம்களில் ஏதாவது நேர்ந்தால் மத்திய, மாநில அரசே பொறுப்பு | கௌதமன் சீற்றம்

Next Post
ஈழ அகதி முகாம்களில்  ஏதாவது நேர்ந்தால் மத்திய, மாநில அரசே பொறுப்பு | கௌதமன் சீற்றம்

ஈழ அகதி முகாம்களில் ஏதாவது நேர்ந்தால் மத்திய, மாநில அரசே பொறுப்பு | கௌதமன் சீற்றம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures