Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

சர்வதேச பொறுப்புக்கூறல் பொறிமுறையை உருவாக்குமாறு கோரிக்கை

February 28, 2020
in News, Politics, World
0

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் இணை அனுசரணையில் இருந்து இலங்கை விலகி கொண்டமையை அடுத்து இலங்கையின் போர்க்குற்றம் தொடர்பில் சர்வதேச பொறுப்புக்கூறல் பொறிமுறையை உருவாக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

சர்வதேச மன்னிப்பு சபை இந்த கோரிக்கையை விடுத்துள்ளது.

இலங்கையில் போரினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்க வேண்டுமானால் அதற்கு சர்வதேச பொறிமுறையே பொருத்தமானது என சர்வதேச மன்னிப்பு சபை குறிப்பிட்டுள்ளது.

இந்த நிலையில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் இருந்து இலங்கை விலகியமையை அடுத்து மனித உரிமைகள் பேரவையிடம் இருந்து வலுவான பதில் தேவைப்படுகிறது.

அது சர்வதேச பொறிமுறை ஒன்றுக்கு சென்று பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதியை உறுதிப்படுத்தும் பொறிமுறையாகவே இருக்கும் என சர்வதேச மன்னிப்பு சபையின் ஆசிய நிலை ஆய்வாளார் தியாகி ருவன் பத்திரனகே தெரிவித்துள்ளார்.

இலங்கையின் புதிய அரசாங்கம் நல்லிணக்கம் மற்றும் பொறுப்புக்கூறல் தொடர்பில் உள்ளக விசாரணைகளை நடத்தப் போவதாக கூறுகிறது.

எனினும் வரலாற்றை பார்க்கும்போது உள்ளக விசாரணைகளில் தோல்விகளே ஏற்பட்டன. பாதிக்கப்பட்டவர்கள் தமக்கான நீதியைக் கோரி காத்திருக்கின்றனர்.

எனவே சர்வதேச பொறிமுறையே சாத்தியமானது என்று பத்திரனகே குறிப்பிட்டுள்ளார்.

Previous Post

இலங்கையின் நல்லிணக்கத்துக்கு உதவி செய்ய ஜேர்மன் தயார்!

Next Post

வட மாகாண சுகாதார தொண்டர்கள் போராட்டம்

Next Post

வட மாகாண சுகாதார தொண்டர்கள் போராட்டம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures