Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

சர்வதேச நாணய நிதியத்தின் 2 ஆம் கட்ட கடன் உதவி

January 17, 2019
in News, Politics, World
0

சர்வதேச நாணய நிதியம் 2016 இல் இலங்கைக்கு மூன்று வருட கால விஸ்தரிக்கப்பட்ட நிதியில் இரண்டாம் கட்ட கடன் உதவியை வழங்க இணக்கம் தெரிவித்துள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

இந்த நிதி வசதியில் 1.5 பில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்க இணங்கியிருந்ததுடன் அதில் 1 பில்லியன் டொலர்களை ஏற்கனவே இலங்கைக்கு வழங்கியிருந்தது.

இலங்கையில் சர்வதேச நாணய நிதியத்தின் செயற்பாடுகளை மீளவும் ஆரம்பிக்கும் சாத்தியம் பற்றி நிதி அமைச்சர் மங்கள சமரவீர தலைமையிலான குழு வொஷிங்டனில் சர்வதேச நாணய நிதியத்தின் நிர்வாகப் பணிப்பாளர் கிறிஸ்மன் லெகார்டுடன் பேச்சுவார்த்தை நடத்தியது.

இலங்கையின் பொருளாதாரம் தொடர்பான அண்மைய முன்னேற்றம் தொடர்பில் அமைச்சர் மங்கள சமரவீர சர்வதேச நாணய நிதியத்துக்கு இந்த சந்திப்பின்போது விளக்கமளித்துள்ளார்.

இப்போதைய நிலையில் இலங்கைக்கு உதவ சர்வதேச நாணய நிதியம் தயாராக இருப்பதாகவும், நிதியின் திட்டத்தை மீண்டும் தொடர்வது பற்றி பேசுவதற்கு சர்வதேச நாணய நிதியத்தின் தூதுக்குழுவொன்று அடுத்த மாதம் (பெப்ரவரி) இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளதாகவும் நிதியத்தின் நிர்வாக பணிப்பாளர் கிறிஸ்மன் லெகார்ட் தெரிவித்துள்ளார்.
Previous Post

ஆசீர்வாதம் இல்லாத யாப்பை சபையில் முன்வைக்க வேண்டாம்!

Next Post

பாலியல் துஸ்பிரயோகம் செய்து கொல்லப்பட்டது நாய் : இலங்கையில் நடந்த கொடுமை

Next Post

பாலியல் துஸ்பிரயோகம் செய்து கொல்லப்பட்டது நாய் : இலங்கையில் நடந்த கொடுமை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures