சர்வதேச தெங்கு தினம் இன்று (ஞாயிற்றுக்கிழமை) அனுஷ்டிக்கப்படுகின்றது. இதனை முன்னிட்டு ஒருவார கால நிகழ்வுகள் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளன.
இது தொடர்பான ஆரம்ப வைபவம் சபாநாயகர் கரு ஜயசூரிய மற்றும் பெருந்தோட்டத்துறை அமைச்சர் நவீன் திசாநாயக்க ஆகியோரின் தலைமையில் இன்று நாடாளுமன்ற வளாகத்தில் இடம்பெறுகின்றது. இதன்போது தென்னங்கன்றுகள் நாட்டப்படவுள்ளன.
அத்துடன் இந்த வாரம் நாடு முழுவதிலும் தெங்கு தொழில்துறையை மேம்படுத்துவதற்கான ஆயிரம் வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ளன.
மேலும் கூகுள் தொழில்நுட்பத்தின் ஊடாக இவ்வாறு தெங்கு பதிவுகள் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
