Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home Sports

சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வுபெற்றது ஏன்? முதன்முறையாக மனம்திறந்த கங்குலி!

November 25, 2017
in Sports
0
சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வுபெற்றது ஏன்? முதன்முறையாக மனம்திறந்த கங்குலி!

சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து கடந்த 2008-ம் ஆண்டு ஓய்வுபெற்றது ஏன் என்பது குறித்து இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி முதன்முறையாக மனம் திறந்துள்ளார்.
இந்தியக் கிரிக்கெட் அணியை உலகின் முன்னணி அணிகளுள் ஒன்றாக மாற்றியவர்களுள் முக்கியமானவராகக் கருதப்படுபவர் சவுரவ் கங்குலி. கடந்த 1995-ம் ஆண்டு முதல் 2006-ம் ஆண்டு வரை இந்திய அணிக்காக தொடர்ச்சியாக போட்டிகளில் பங்கேற்று வந்த கங்குலி, கடந்த 2008-ம் ஆண்டு நாக்பூரில் நடந்த ஆஸ்திரேலிய அணிக்கெதிரான டெஸ்ட் போட்டியுடன் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து விடை பெற்றார்.

கங்குலியின் கிரிக்கெட் கேரியர் 2005-ம் ஆண்டு முதல் 2008-ம் ஆண்டு வரை அவ்வளவு உவப்பானதாக இருக்கவில்லை. அதிலும் குறிப்பாக இந்திய அணியின் அப்போதைய பயிற்சியாளராக இருந்த கிரேக் சேப்பலுக்கும் கங்குலிக்கும் இடையில் ஏற்பட்ட பல்வேறு மனக்கசப்புகள் இந்திய கிரிக்கெட்டில் பல ஆண்டுகளாக பேசுபொருளாக இருந்து வருபவை. கேப்டன் பொறுப்பிலிருந்து கடந்த 2005-ம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் கங்குலி நீக்கப்பட்டார். பயிற்சியாளர் சேப்பலுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடே கங்குலி பதவிப்பறிப்பின் பின்னணி என்று அப்போது பரபரப்பாக பேசப்பட்டது.

பின்னர் 2006-ம் ஆண்டு ஜனவரியில் அணியிலிருந்து கங்குலி கழற்றிவிடப்பட்டார். அந்த ஆண்டு இறுதியில் நடைபெற்ற தென்னாப்பிரிக்க அணிக்கெதிரான டெஸ்ட் போட்டியில் மீண்டும் இடம்பெற்ற கங்குலி, அந்த போட்டியில் 51 ரன்கள் எடுத்தார். அதன்பின்னர் 2008-ல் ஓய்வுபெறும் முன்பாக 3 சதங்கள் மற்றும் பெங்களூருவில் நடைபெற்ற பாகிஸ்தான் அணிக்கெதிராக இரட்டை சதம் (239) என கங்குலி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.

இந்தநிலையில், சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வுபெற்றது ஏன் என்று கங்குலி முதன்முறையாக மனம்திறந்துள்ளார். கொல்கத்தாவில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் மனைவியுடன் கலந்துகொண்ட கங்குலில் பேசும்போது, ‘உலக அளவில் விளையாட்டு வீரர்களை எடுத்துக் கொண்டால், கேரியரின் இறுதிக் காலத்தில் சிறப்பான ஆட்டத்தையே வெளிப்படுத்தியுள்ளனர். தியாகோ மாராடோனா முதல் இதற்கு உதாரணங்கள் பலவற்றைக் கூறலாம். கிரிக்கெட் போட்டிகளிலிருந்து 2011-ல் ஓய்வுபெற்ற டிராவிட், அந்த ஆண்டில் மட்டுமே 3 அல்லது 4 சதங்களை விளாசினார். விளையாட்டைப் பொறுத்தவரை மற்றொருவருக்கு நீங்கள் வாய்ப்பளிக்க வேண்டிய சூழல் வரும்.
கிரேக் சேப்பல் உடனான அந்த நிகழ்வு எனது கண்ணைத் திறந்த நிகழ்வு என்று கூறலாம். 1995 முதல் 2006 வரை எனது கேரியர் கிராப் மேல்நோக்கியே சென்றது. அந்த காலகட்டத்தில் ஒருதொடரைக் கூட நான் மிஸ் செய்தது கிடையாது. அதில், கேப்டனாக 6 ஆண்டுகள் மட்டுமே நான் பதவி வகித்தேன். 2006-ம் ஆண்டுக்கு முன்புவரை உலகமே எனது காலடியில் இருந்தது. ஒரு காலத்தில் அணியில் இடம் கிடைக்காதா என்ற சூழல் ஏற்பட்டது. அணியில் இடம் கிடைத்து விடாதா என்று காத்திருந்தது போதும் என தோன்றியதால் கிரிக்கெட் போட்டிகளிலிருந்து விடைபெறலாம் என்ற முடிவுக்கு வந்தேன்’ என்றார்.

Previous Post

முதல் நாள் சரித்திரத்தை மாற்றிய ஸ்பின் கூட்டணி

Next Post

ஆஷஸ் முதல் டெஸ்ட் போட்டி: பரபரப்பான சூழலில் மூன்றாவது நாள் ஆட்டம் முடிந்தது!

Next Post
ஆஷஸ் முதல் டெஸ்ட் போட்டி: பரபரப்பான சூழலில் மூன்றாவது நாள் ஆட்டம் முடிந்தது!

ஆஷஸ் முதல் டெஸ்ட் போட்டி: பரபரப்பான சூழலில் மூன்றாவது நாள் ஆட்டம் முடிந்தது!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

50,000 டொலர்களுக்கு மேலாக சரவணபவன் என்ற உணவகத்தின் சார்பாக அதன் தலைவர் மாண்புமிகு திரு கணேஷன் சுகுமார் அவர்கள் வைத்தியசாலை அதிகாரிகளிடம் அந்த நிதி உதவியினை வழங்கியிருப்பதனையும் இவ்வாறான நிதி அன்பளிப்பு செய்யும் நடவடிக்கை தொடர்ந்து சரவணபவன் என்ற உணவகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவது பாராட்டுதல்களுக்குரியதாகும்.

கனடாவில் மட்டுமன்றி உலகளாவியரீதியில் பல கிளை நிறுவனங்களை கொண்ட Skymoon Travels and Tours என்ற நிறுவனத்தின் உரிமையாளரும் பிரபல தொழில் அதிபருமான Andrew அவர்களின் அதீத ஆசையின் பிரகாரமே LUCID NIGHTSஇசைக்குழு என்ற ஆரம்பிக்கப்பட்டது.

கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

கொரோனா தொற்று பாதிப்புக்கு பிறகு அதிகரிக்கும் சர்க்கரை நோய், ஞாபக மறதி, சுவாச பிரச்சினைகள் | அப்போலோ மருத்துவர்கள்

தமிழ்நாட்டின் தனிநபர் கடன் எத்தனை லட்சம்? வெள்ளை அறிக்கையில் வெளியான தகவல்

தமிழ்நாட்டின் தனிநபர் கடன் எத்தனை லட்சம்? வெள்ளை அறிக்கையில் வெளியான தகவல்

June 19, 2026
தமிழ் – சிங்கள திரையுலகை இணைக்கும் ‘ராவண மகன்’ ; கொழும்பில் பிரமாண்ட தொடக்க விழா

தமிழ் – சிங்கள திரையுலகை இணைக்கும் ‘ராவண மகன்’ ; கொழும்பில் பிரமாண்ட தொடக்க விழா

June 19, 2026
முறைப்பாடுகளால் நிரம்பி வழியும் சிஐடி! திறக்கப்பட்டது புதிய விசாரணை பிரிவு

காவல்துறையினர் குறித்து முறைப்பாடளிக்க புதிய முறைமை அறிமுகம்!

June 19, 2026
விஜயின் கருத்தால் யாழ் மக்களுக்காக கொதித்தெழுந்த தேரர்

பயிர்கடன் குறித்து முதல்வர் விடுத்த அதிரடி உத்தரவு

June 18, 2026

Recent News

தமிழ்நாட்டின் தனிநபர் கடன் எத்தனை லட்சம்? வெள்ளை அறிக்கையில் வெளியான தகவல்

தமிழ்நாட்டின் தனிநபர் கடன் எத்தனை லட்சம்? வெள்ளை அறிக்கையில் வெளியான தகவல்

June 19, 2026
தமிழ் – சிங்கள திரையுலகை இணைக்கும் ‘ராவண மகன்’ ; கொழும்பில் பிரமாண்ட தொடக்க விழா

தமிழ் – சிங்கள திரையுலகை இணைக்கும் ‘ராவண மகன்’ ; கொழும்பில் பிரமாண்ட தொடக்க விழா

June 19, 2026
முறைப்பாடுகளால் நிரம்பி வழியும் சிஐடி! திறக்கப்பட்டது புதிய விசாரணை பிரிவு

காவல்துறையினர் குறித்து முறைப்பாடளிக்க புதிய முறைமை அறிமுகம்!

June 19, 2026
விஜயின் கருத்தால் யாழ் மக்களுக்காக கொதித்தெழுந்த தேரர்

பயிர்கடன் குறித்து முதல்வர் விடுத்த அதிரடி உத்தரவு

June 18, 2026
  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures