Monday, August 25, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

சம்பியன்ஸ் லீக் கால்பந்தாட்டம் | 3 போட்டிகள் இன்று

June 19, 2022
in News, Sports
0
சம்பியன்ஸ் லீக் கால்பந்தாட்டம் | 3 போட்டிகள் இன்று

இலங்கை கால்பந்தாட்ட சம்மேளனம் ஏற்பாடு செய்துள்ள சம்பியன்ஸ் லீக் கால்பந்தாட்டத்தில் 3 போட்டிகள் 19 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் நடைபெறவுள்ளன.

மிகவும் பழைமைவாய்ந்த சோண்டர்ஸ் கழகத்துக்கும் ஜாவா லேன் கழகத்துக்கும் இடையிலான போட்டி கொழும்பு சுகததாச விளையாட்டரங்கிலும் நிகம்போ யூத் கழகத்துக்கும் பொலிஸ் கழகத்துக்கும் இடையிலான போட்டி காலியிலும் சொலிட் கழகத்துக்கும் நியூ ஸ்டார் கழகத்துக்கும் இடையிலான போட்டி குருநாகல், மாளிகாபிட்டியிலும் நடைபெறவுள்ளன.

இந்த மூன்று போட்டிகளும் பரபரப்பை ஏற்படுத்தக்   கூடியவையாக இருக்கும் அதேவேளை, சோண்டர்ஸ் – ஜாவா லேன் அணிகளுக்கு இடையிலான போட்டி முக்கிய இடம் பிடிக்கிறது.

தனது முதல் இரண்டு போட்டிகளில் சவால்களுக்கு மத்தியில் வெற்றியீட்டிய ஜாவா லேன் கழகத்துக்கு இன்றைய போட்டி இலகுவாக அமையும் என்று சொல்வதற்கில்லை.

பொதுவாக கால்பந்தாட்ட அரங்கில் ‘பரம வைரி’களாக கருதப்படும் இந்த இரண்டு அணிகளுக்கும் இடையில் இதுகாலம் வரை நடைபெற்ற போட்டிகள் எல்லாம் மிகவும் பரபரப்பை தோற்றுவித்துள்ளதால் இன்றைய போட்டியிலும் பரபரப்பையும் விறுவிறுப்பையும் எதிர்பார்க்கலாம்.

சோண்டர்ஸ் கழகம் இதுவரை விளையாடிய 2 போட்டிகளில் ஒரு வெற்றியையும் ஈட்டவில்லை. ஒரு போட்டியை வெற்றிதோல்வியின்றி முடித்துக்கொண்ட சோண்டர்ஸ், 2ஆவது போட்டியில் தோல்வியைத் தழுவியது.

இன்று தனது முதலாவது வெற்றியை ஈட்டுவதாக இருந்தால் சோண்டர்ஸ் கழகம் முதிய வீரர்களில் மாத்திரம் அல்லாமல் இளையவர்களிலும் நம்பிக்கை கொள்வது அவசியமாகும்.

ஜாவா லேன் கழகமும் மூத்த வீரர்களுக்கு வாய்ப்பு அளிக்கும் அதேவேளை 60 அல்லது 70 நிமிடங்களின் பின்னர் இளையவர்களை கூடுதலாக ஈடுபடுத்தி விளையாடுவது அவசியமாகும்.

இதேவேளை, நிகம்போ யூத் கழகத்துக்கும் பொலிஸ் கழகத்துக்கும் இடையிலான போட்டியும் கடைசிவரை பரபரப்பை ஏற்படுத்தும் என கருதப்படுகிறது.

நிகம்போ யூத் கழகம் ஒரு போட்டியில் தோல்வி அடைந்ததுடன் மற்றைய போட்டியில் வெற்றியீட்டியுள்ளது. பொலிஸ் கழகம் தனது 2 போட்டிகளிலும் தோல்விகளைத் தழுவியுள்ளது.

எவ்வாறாயினும் இன்றைய போட்டியில் பொலிஸ் கழகம் தனது முதலாவது வெற்றிக்காக கடுமையாக முயற்சிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

சொலிட்   எதிர் நியூ ஸ்டார்

சொலிட் கழகத்துகும் நியூ ஸ்டார் கழகத்துக்கும் இடையிலான போட்டி நடுநிலையான குருநாகல், மாளிகாபிட்டி மைதானத்தில் நடைபெறுவதால் இந்த போட்டி கடைசிவரை விறுவிறுப்பை தோற்றுவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இரண்டு அணிகளும் உள்ளூர் வீரர்களில் மாத்திரம் நம்பிக்கைக் கொண்டு வெளிநாட்டு வீரர்களை இணைக்காமல் விளையாடி வருகின்றமை பாராட்டுக்குரியதாகும்.

மாகாண மட்டப் போட்டிகளில் விளையாடிய பலர் இரண்டு அணிகளிலும் இடம்பெறுவதுடன் வட மாகாண வீரர்களும் விளையாடுகின்றமை விசேட அம்சமாகும்.

இந்த இரண்டு அணிகளில் எந்த அணி சிறந்த வியூகங்களுடன் விளையாடுகின்றதோ அந்த அணியே வெற்றிபெறக் கூடியதாக இருக்கும்.

Previous Post

தாயின் 100ஆவது பிறந்தநாள் ; பாதபூஜை செய்து ஆசி பெற்ற இந்திய பிரதமர் மோடி

Next Post

அத்தியாவசிய சுகாதார சேவைகளுக்கு வெள்ளிக்கிழமைகளில் எரிபொருள் வழங்கத் திட்டம்

Next Post
இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் விடுத்துள்ள வேண்டுகோள் !

அத்தியாவசிய சுகாதார சேவைகளுக்கு வெள்ளிக்கிழமைகளில் எரிபொருள் வழங்கத் திட்டம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures