Wednesday, September 10, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home Cinema

சண்டை காட்சிகளில் நடிப்பதற்கு பயிற்சி பெற்றேன் | சாக்ஷி அகர்வால்

February 20, 2023
in Cinema, News, முக்கிய செய்திகள்
0
சண்டை காட்சிகளில் நடிப்பதற்கு பயிற்சி பெற்றேன் | சாக்ஷி அகர்வால்

”நான் கடவுள் இல்லை என்ற படத்தில் இடம்பெறும் சண்டைக் காட்சிகளில் நடிப்பதற்கு முறையாக பயிற்சி எடுத்துக்கொண்ட பின்னரே நடித்தேன்” என அப்படத்தின் நாயகியான சாக்ஷி அகர்வால் தெரிவித்திருக்கிறார்.

இணையத்தில் தொடர்ச்சியாக கவர்ச்சி புகைப்படங்களை பதிவிட்டு, இணையவாசிகளை எப்போதும் தொடர்பில் வைத்திருக்கும் நடிகை சாக்ஷி அகர்வால். 

இவர் கதாநாயகியாக நடித்து வெளியாகி வெற்றி பெற்ற திரைப்படம் ‘நான் கடவுள் இல்லை’.  இந்த படத்தில் பெற்ற அனுபவங்கள் குறித்து அவர் பேசுகையில், 

”பொதுவாக எம்முடைய பெற்றோர்கள் நான் நடிக்கும் படங்களை படமாளிகைக்கு சென்று கண்டு ரசிக்க மாட்டார்கள். ஆனால், முதன்முறையாக எனது நடிப்பில் வெளியான ‘நான் கடவுள் இல்லை’ என்ற திரைப்படத்தை பட மாளிகைக்குச் சென்று மூன்று முறை கண்டு ரசித்திருக்கிறார்கள். 

எனது கதாபாத்திரம் நன்றாக இருந்தது என்று அவர்கள் தெரிவித்தபோது மனதில் உற்சாகம் ஊற்றெடுத்தது.

மேலும் இந்தத் திரைப்படத்தில் சமுத்திரக்கனி மற்றும் இனியா ஆகியோருடன் நடித்த அனுபவமும் மறக்க இயலாதது. படப்பிடிப்பு தளத்தில் அவர்கள் எமக்கு வழங்கிய அறிவுரை மதிப்புமிக்கது. 

எஸ்.ஏ. சந்திரசேகர் போன்ற அனுபவம் மிக்க மூத்த இயக்குநரின் இயக்கத்தில் நடித்ததில் மகிழ்ச்சியடைகிறேன். 

எம்முடைய திரையுலக பயணத்தில் மூத்த இயக்குநருடன் பணியாற்றுவது இதுதான் முதல் முறை. படப்பிடிப்பின் தொடக்கத்தில் பயமும் பதற்றமும் இருந்தது. அவர் சண்டை காட்சிகளில் டூப் கலைஞர்களை பயன்படுத்தாமல் நேரடியாக சண்டைக் காட்சிகளில் நடிக்கலாமே என எம்மிடம் சொன்னதும், இதனை கட்டளையாக ஏற்றுக்கொண்டு, திரையுலக சண்டை பயிற்சி இயக்குநர் கனல் கண்ணனிடம் ஏழு நாட்கள் தொடர்ச்சியாக பயிற்சி பெற்றேன். 

அதன் பின்னர் எக்ஸன் காட்சிகள் தொடர்பான காணொளிகளை கண்டு எம்முடைய திறமைகளை வளர்த்துக்கொண்டு பிறகே நடித்தேன். 

எம்முடைய நேர்த்தியான உழைப்பை கண்ட இயக்குநர் எஸ்.ஏ. சந்திரசேகர் படத்தின் இரண்டாம் பாதியில் மட்டுமல்லாமல் முதல் பாதியிலும் எமக்கென சில சண்டை காட்சிகளை ஏற்படுத்திக் கொடுத்தார். 

இது எம்முடைய முன்னேற்றத்துக்கு சிறந்த வாய்ப்பாக அமைந்தது. இந்தப் படத்தில் நடித்த பிறகு கதாநாயகியாக நடிப்பதை விட கதையின் நாயகியாக நடிப்பதற்கான அனைத்து தகுதிகளையும் வளர்த்துக்கொண்டதாக கருதுகிறேன். இதனால் மகிழ்ச்சியுடன் இருக்கிறேன்” என்றார்.

இதனிடையே நடிகை சாக்ஷி அகர்வால் தற்போது ‘பஹிரா’, ‘கெஸ்ட் சாப்டர் 2’, ‘தி நைட்’, ‘புரவி’, ‘குறுக்கு வழி’, ‘120 ஹவர்ஸ்’ ஆகிய படங்களில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Previous Post

ஹிப் ஹொப் தமிழா ஆதியின் ‘வீரன்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு

Next Post

மறவன்புலவு சச்சிதானந்தனை சந்தித்த அர்ஜுன் சம்பத்

Next Post
மறவன்புலவு சச்சிதானந்தனை சந்தித்த அர்ஜுன் சம்பத்

மறவன்புலவு சச்சிதானந்தனை சந்தித்த அர்ஜுன் சம்பத்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures