Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

சட்டமோ, அரசியல் திருத்தமோ வடக்கு மனங்களை வெல்லாது

June 29, 2018
in News, Politics, World
0

வடக்கு மக்­க­ளுக்கு கருணை, இரக்கம், பரிவு என்­ப­னவே தேவை. இத­னை­வி­டுத்து சட் டத்­தின் மூலமோ, அர­சி­யல் திருத்­தங்­கள் மூலமோ அவர்­களின் மனங்­களை வென்­று­விட முடி­யாது. இதனை நாடு முழுவதும் தெளி­வு­ப­டுத்த வேண்டும் என்று வடக்கு மாகாண ஆளு­நர் ரெஜி­னோல்ட் குரே தெரி­வித்தார்.

பெளர்­ணமி தினத்தை முன்­னிட்டு பாதிக்­கப்­பட்­ட­வர்­க­ளில் குறிப்­பிட்ட தொகை­யி­ன­ருக்­கான வாழ்வா­தார உத­வி­கள் வழங்­கும் நிகழ்வு முல்­லைத்தீவு மாவட்டச் செய­லக முன்­றலில் நேற்­று முன்­தி­னம் நடை­பெற்­றது. அதில் உரை ­யாற்­று­கை­யில் ஆளு­ நர் மேலும் தெரிவித்­த­தா­வது:

தமிழ் மக்­க­ளு­டன் நான் இங்கே வாழ்ந்து வரு­கின்­றேன். அவர்­க­ளின் கலா­சா­ரம் மனித நேயம், மனி­தத் தன்மை அவர்­க ­ளின் துன்­பங்­கள் அனைத்­தை­யும் நன்கு புரிந்து கொண்­டி­ருக்­கின்­றேன்.போரில் இரண்டு தரப்­புக்­கள் சண்­டையிட்­டன. போர் நிறை­வ­டைந்து சமா­தா ­னம் ஏற்­பட்ட பின்­னர் கையில் இருக்க வேண்­டி­யது துவக்கு அல்ல சமா­தான ஒளி விழக்கு. அதனை எடுத்­துச் செல்ல வேண்­டும்.

இந்­தப் பகு­தி­யில் கட்­டட ஒப்­பந்­த­கா­ரர்­கள் இடை­ந­டு­வில் விட்­டுச் செல்­லும் கட்­ட­டங்­களை உரிய காலப்­ப­கு­தி­யில் இரா­ணு­வத்­தி­னர் கட்டி முடிக்­கின்­ற­னர். வீதி­க­ளைச் சீர­மைக்­கின்­ற­னர்.

எதிர்­கால சந்­த­தி­யி­ன­ருக்­காக ஆயி­ரக்­க­ணக்­கான மரங்­களை நட்­டுள்­ள­னர். கட்டி முழு­மைப்­ப­டுத்­தப்­ப­டா­மல் காணப்­ப­டும் வறிய மக்­க­ளின் வீடு­களை இரா­ணு­வத்­தி­னர் கட்­டிக் கொடுக்­கின்­ற­னர். குருதி கொடுக்­கின்­ற­னர். இவை போன்ற சேவை­களை இன்­ன­மும் விரி­வு­ப­டச் செய்ய வேண்­டும் என்று எதிர்­பார்­கின்­றேன்.

போரா­லும் சுனா­மி­யா­லும் மிக­வும் பாதிக்­கப்­பட்ட இந்த மக்­க­ளுக்கு தென்­னி­லங்­கை­யி­லி­ருந்து வந்த பௌத்த துற­வி­கள் உதவி செய்­கின்­றமை மிகுந்த மன­ம­கிழ்ச்­சியை தரு­கின்­றது. இந்த நல்ல செயற்­பாடு தொடர வேண்­டும் – என்­றார்.

நிகழ்­வில், போதி­ராஜா பத­னமே தொண்டு நிறு­வ­னத்­தின் தலை­வர் ஓமலே சோபி­த­தே­ரர் அவர்­க­ளால் தாய்­லாந்து, சிங்­க­பூர், மலே­சிய நாட்­ட­வர்­க­ளின் பங்­க­ளிப்­பு­டன் முல்­லைத்­தீ­வில் மாற்­றுத்­தி­ற­னா­ளி­க­ளுக்கு மூன்று சில்லு வண்­டி­கள் – 50, மாம­ரக் கன்­று­கள் – 1,000, பசுக் கன்­று­கள் – 100 மற்­றும் பாட­சாலை மாண­வர்­க­ளுக்­கான உப­க­ர­ணங்­கள் வழங்­கப்­பட்­டன.

முல்­லைத்­தீவு இரா­ணுவ கட்­டளை தள­பதி மேஜர் ஜென­ரல் துஸ்­யந்த இரா­ஜ­கு­ரு­வின் ஏற்­பாட்­டில் நடை­பெற்ற இந்த நிகழ்­வில் முல்­லைத்­தீவு மாவட்­டச் செய­லர் திரு­மதி ரூப­வதி கேதீஸ்­வ­ரன், வடக்கு மாகாண ஆளு­ந­ரின் உத­விச் செய­லர் ஏ.எக்ஸ். செல்­வ­நா­ய­கம் உட்­ப­டப் பலர் கலந்­து­கொண்­டி­ருந்­த­னர் என்று ஆளு­ந­ரின் ஊடக அறிக்­கை­யில் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

Previous Post

சுழிபுரத்திலிருந்து சண்டிலிப்பாய் பிரதேச செயலகம் வரை பேரணி

Next Post

மேற்குலகின் தலையீடுகள் மிகப் பெரியதாக இருக்காது : மஹிந்த ராஜபக்ஷ

Next Post

மேற்குலகின் தலையீடுகள் மிகப் பெரியதாக இருக்காது : மஹிந்த ராஜபக்ஷ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures