Sunday, August 24, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

சட்டத்தின் பிரகாரம் யாரும் அமைச்சுப்பதவிகளில் இருந்து விலகவில்லை | அனுர பிரியதர்ஷன யாப்பா

April 5, 2022
in News, Sri Lanka News
0
அரசாங்க நிதி பற்றிய குழுவின் தலைவராக அநுர பிரியதர்ஷன யாப்பா ஏகமனதாகத் தெரிவு

சட்டத்தின் பிரகாரம் இதுவரை எந்த அமைச்சரும் பதவி விலகவில்லை. தனிப்பட்ட ரீதியில் ஒருவர் தான் அமைச்சுப்பதவியில் இருந்து விலகுவதாக தெரிவிப்பதன் மூலம் அவ்வாறு விலகியதாக கருதமுடியாது என  அனுர பிரியதர்ஷன யாப்பா தெரிவித்த்தார்.

பாராளுமன்றம் இன்று காலை 10மணிக்கு சபாநாயகர் தலைமையில் கூடியது. பிரதான நடவடிக்கைகள் இடம்பெற்றதைத் தொடர்ந்து, நாட்டின் தற்போதைய அரசியல் நிலைமை தொடர்பாக குறிப்படுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,

சட்டபூர்வமாக எந்த அமைச்சரும் பதவி விலகவில்லை. அவர்கள் விலகியதாக தெரிவிப்பது சட்டபூர்வமானதல்ல. அரசாங்கம் தொடர்பில் மக்கள் மத்தியில் அதிருப்தி உள்ளது. பாராளுமன்றம் அதனை உணர்ந்து செயற்பட வேண்டும்.இன்றேல் நிலைமை மோசமாகும். இந்த நிலையில் தனியான குழுவாக இயங்க முடிவு செய்துள்ளோம்.

அத்துடன் அமைச்சுப்பதவிகளில் விலகுவதாக இருந்தால் அதுதொடர்பான ராஜினாமா கடிதத்தை ஜனாதிபதிக்கே கையளிக்கவேண்டும். அவ்வாறு ஒன்றும் இடம்பெறவில்லை என்றார்.

இதன்போது எதிர்க்கட்சி உறுப்பினர் புத்திக்க பத்திரண எழுந்து,

அமைச்சுப்பதவிகளில் இருந்து விலகினால் பாராளுமன்ற ஆசனங்களில் அமைச்சர்களுக்கே முன்னுரிமை வழங்கவேண்டும். அவ்வாறான எந்த விடயமும் இடம்பெறவில்லை. அதேநேரம் பிரதி சபாநாயகர் பதவியை ராஜினாமா செய்ததாக தெரிவித்திருக்கின்றார். அவரது இடத்துக்கு ஒருவரை உடனடியாக நியமிக்கவேண்டும். அதனால் சபாநாயகர் இதுதொடர்பில் தெளிவுபடுத்தவேண்டும் என்றார்.

இதற்கு சபாநாயகர் பதிலளிக்கையில், அமைச்சர்கள் பதவி விலகியமை மற்றும் பிரதி சபாநாயகர் பதவி விலகியமை தொடர்பில் எனக்கு ஜனாதிபதி அறிவிக்க வில்லை. ஜனாதிபதி அறிவித்த பின்னர் தான் அதுதொடர்பில் பாராளுமன்றத்தில் நடவடிக்கை எடுக்க முடியும் என்றார்.


#No 1 TamilWebSite 🇨🇦 | http://Facebook page / easy 24 news |  Easy24News –  யூடியூப் YouTube | [email protected]

Previous Post

இலங்கை கழுத்தை நெறிக்கும் டிராகன்! | நேரம் பார்த்து கடனை திருப்பி கேட்ட சீனா! செக்!

Next Post

கோட்டாவை நாட்டை விட்டு வெளியேறுமாறு வவுனியாவில் பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டம்

Next Post
கோட்டாவை நாட்டை விட்டு வெளியேறுமாறு வவுனியாவில் பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டம்

கோட்டாவை நாட்டை விட்டு வெளியேறுமாறு வவுனியாவில் பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures