Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

சகோதர மொழி குறித்து ஒருவர் அறியாமல் இருப்பதற்கு கல்வி முறைமையே காரணம்

December 24, 2019
in News, Politics, World
0

இலங்கையில் இரண்டு அரச மொழிகளே உள்ள போதிலும் சகோதர மொழியைப் பற்றி இன்னும் ஒருவர் தெரியாமல் இருப்பதற்கு கல்வி முறைமையே காரணம் என கல்வி அமைச்சர் டளஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார்.

கல்வி அமைச்சில் நடைபெற்ற அகில இலங்கை இரண்டாவது தேசிய மொழி போட்டியில் வெற்றியீட்டியோருக்கு பரிசு வழங்கும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர்  இதனைக்  கூறியுள்ளார்.

நாட்டில் 21 மில்லியன் மக்கள் வாழ்கின்ற போதிலும் இரண்டு மொழிகளே பேசப்படுகின்றன. எனினும்,  சகோதர மொழியைப் பற்றி நாம் இன்னும் புரிந்து கொள்ளவில்லை. இது தொடர்பில் வெட்கப்பட வேண்டியுள்ளது.

இந்த துர்ப்பாக்கிய நிலைக்கு கடந்த 72 வருடங்களாக முகங்கொடுத்து வருகின்றோம்.   நாட்டின் கல்வி முறையில் உடனடியாக மாற்றத்தைக் கொண்டு வந்து இதற்கு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

உலகின் அபிவிருத்தி அடைந்த நாடுகளின் இரகசியம் என்னவெனில் தேசிய இனங்களாக ஒன்றிணைந்து செயற்பட்டமையாகும். 45 இலட்சத்திற்கும் மேற்பட்டுள்ள எமது மாணவர்கள் ஆற்றல் மிக்கவர்களாவர். ஆற்றல் உள்ளோர், ஆற்றல் அற்றோரென மாணவர்களை வகைப்படுத்தக்கூடாது எனவும் கல்வி அமைச்சர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Previous Post

முன்னாள் அமைச்சர் சம்பிக்கவின் சாரதிக்கு விளக்கமறியல்

Next Post

கட்டுநாயக்க விமான நிலையப் பாதை ஒழுங்கில் மாற்றம்

Next Post

கட்டுநாயக்க விமான நிலையப் பாதை ஒழுங்கில் மாற்றம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures