Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

கோவில் கும்பாபிஷேகம் : சிங்கப்பூர் பிரதமர் பங்கேற்பு

April 24, 2018
in News, Politics, World
0

சிங்கப்பூரில், 164 ஆண்டுகள் பழமை வாய்ந்த, ஸ்ரீனிவாச பெருமாள் கோவில் கும்பாபிஷேக விழாவில், அந்நாட்டு பிரதமர், லீ சீன் லுாங் பங்கேற்றார்.

சிங்கப்பூரின், ‘லிட்டில்இந்தியா’ பகுதியில், 164 ஆண்டுகள் பழமையான, ஸ்ரீனிவாச பெருமாள் கோவில் உள்ளது. இந்த கோவிலை, 1978ல், தேசிய நினைவுச் சின்னமாக, சிங்கப்பூர் அரசு அறிவித்தது. கோவிலை, 29 கோடி ரூபாய் செலவில், நான்காவது முறையாக சீரமைக்கும் பணி, 2016ல் துவங்கியது. இப்பணியில், உள்ளூர் பக்தர்கள் மற்றும் தொழிலாளர்களுடன், தமிழகத்தைச் சேர்ந்த, சிற்ப மற்றும் ஓவியக் கலைஞர்களும் ஈடுபட்டனர்.

சீரமைப்புப் பணிகள் முடிவடைந்ததை அடுத்து, நேற்று முன்தினம், கும்பாபிஷேகம் நடந்தது. அப்போது, குடங்களில் எடுத்து வரப்பட்ட புனித நீர், ஒன்பது கோபுர கலசங்கள் மற்றும் கருவறையில் உள்ள பெருமாள் சிலை மீது தெளிக்கப்பட்டது.

இவ்விழாவில், 40 ஆயிரம் பக்தர்கள், சிங்கப்பூர் பிரதமர், லீ சீன் லுாங், பிரதமர் அலுவலக அமைச்சர், சான் சுன் சிங் உள்ளிட்ட நான்கு அமைச்சர்களும் பங்கேற்றனர்.

Previous Post

உலகின் ‘மெகா’ விமானம்! ஆறு இன்ஜின், 28 சக்கர அதிசயம்

Next Post

பேருந்து விபத்து : 32 சீனர்கள் பலி

Next Post

பேருந்து விபத்து : 32 சீனர்கள் பலி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures