Monday, September 8, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

கோயில் வழிபாட்டில் பாகுபாடு கூடாது; அனைவரையும் சமமாக நடத்த வேண்டும் | நீதிமன்றம்

February 17, 2023
in News, World, முக்கிய செய்திகள்
0
யாழ். வர்த்தகர்கள் 12 பேருக்கு 3 இலட்சம் ரூபா தண்டம்!

கோயில் வழிபாட்டில் பாகுபாடு காட்டக் கூடாது. அனைவரையும் ஒரே

மாதிரியாக நடத்த வேண்டும் என உயர்நீதிமன்ற மதுரைக்கிளை தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக ராஜபாளையத்தைச் சார்ந்த மேடையாண்டி என்பவர், உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு தாக்கல் செய்திருந்தார். அதில், “தென்காசி மாவட்டம் திருவேங்கடம் தாலுகாவில், அருள்மிகு மாதரசி அம்மன் கோயில் மற்றும் மேடையாண்டி சுவாமி கோயில்கள் உள்ளன. இந்த கோயில் மிகவும் பிரசித்தி பெற்றது. இதனை குலதெய்வ கோயிலாகக் கொண்டுள்ள நாங்கள் வழிவழியாக வழிபட்டு வருகின்றோம்.

இந்நிலையில் கடந்த 2020-ம் ஆண்டு முதல் அந்த பகுதியில் வசிக்கக்கூடிய உயர் சாதியினர் சிலர் இந்த கோயிலில் எங்களை வழிபாடு செய்ய விடாமல் தடுத்து வருகின்றனர். இந்த கோயில் உயர் சாதியினருக்கு சொந்தமான கோயில் என்று உரிமை கொண்டாடி வருகின்றனர். ஆனால் இந்த கோயில் இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள கோயிலாகும். எனவே இந்த ஆண்டு நடைபெற உள்ள மகா சிவராத்திரி விழாவில் கலந்து கொண்டு பூஜை

செய்து வழிபாடு செய்ய எங்களுக்கு அனுமதி வேண்டும் என்று மாவட்ட ஆட்சியரிடம்

மனு அளித்திருந்தோம். ஆனால் இதுவரை எந்த பதிலும் இல்லை. எனவே பட்டியல்

வகுப்பைச் சார்ந்த எங்களை கோயிலில் வழிபட அனுமதிக்க உத்தரவிட வேண்டும்” என

கூறியிருந்தார்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன், “கோயில் வழிபாட்டில்

பாகுபாடு காட்டக் கூடாது. அனைவரையும் சமமாக ஒரே மாதிரியாக நடத்த வேண்டும் என குறிப்பிட்டு, அனைத்து தரப்பினரும் அமைதியான முறையில் வழிபாடு நடத்துவதை

மாவட்ட நிர்வாகம், காவல்துறை உறுதிப்படுத்த வேண்டும் என கூறி வழக்கு விசாரணையை பிப்ரவரி 27-ம் தேதிக்கு ஒத்தி வைத்து உத்தரவு பிறப்பித்தார்.

Previous Post

“மக்கள் மீது வரிகளை சுமத்தாமல் மாற்று வழிகளை கையாளுங்கள்” | மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் வேண்டுகோள்

Next Post

மகாராஷ்டிராவில் நிலத்துக்கு அடியில் கேட்ட மர்ம ஒலி | பூகம்ப வதந்தியால் பொதுமக்கள் பீதி

Next Post
மகாராஷ்டிராவில் நிலத்துக்கு அடியில் கேட்ட மர்ம ஒலி | பூகம்ப வதந்தியால் பொதுமக்கள் பீதி

மகாராஷ்டிராவில் நிலத்துக்கு அடியில் கேட்ட மர்ம ஒலி | பூகம்ப வதந்தியால் பொதுமக்கள் பீதி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures