Sunday, August 24, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home Cinema

‘கோமாளி’ பட நடிகைக்கு கொரோனா தொற்று

May 21, 2021
in Cinema, News
0
‘கோமாளி’ பட நடிகைக்கு கொரோனா தொற்று

ஜெயம் ரவி நடிப்பில் வெளியாகி வெற்றிபெற்ற ‘கோமாளி’ படத்தில் நடித்த நடிகை சம்யுக்தா ஹெக்டேவிற்கு கொரனோ தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியிருக்கிறது.

‘வாட்ச்மேன்’ என்ற படத்தின் மூலம் தமிழ் இரசிகர்களுக்கு அறிமுகமானவர் நடிகை சம்யுக்தா ஹெக்டே.

அதனைத் தொடர்ந்து வெளியான ‘கோமாளி’ படத்தின் மூலம் தமிழ் இரசிகர்களிடம் பிரபலமானவர். இதைத்தொடர்ந்து ‘பப்பி’ என்ற படத்திலும் நடித்திருக்கும் இவர், தற்போது உருவாகிவரும் ‘தேள்’ என்ற படத்திலும் நடித்து வருகிறார்.

சமூக வலைதளங்களில் தீவிரமாக இயங்கி வரும் முன்னணி நடிகைகளில் இவரும் ஒருவர்.

இவர் அண்மையில் தன்னுடைய சமூக வலைத்தள பக்கத்தில் பதிவிட்டிருப்பதாவது…

‘நண்பர்களே.. நீங்கள் எல்லோரும் நன்றாக இருக்கிறீர்கள் என்று நம்புகிறேன். எனக்கு கொரோனாத் தொற்று பாதிப்பு ஏற்பட்டிருப்பது பரிசோதனைகளின் மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

மருத்துவர்களின் அறிவுரைப்படி நான் தற்போது தனிமைப்படுத்திக் கொண்டு சிகிச்சை பெற்று வருகிறேன். உங்களையும் கவனித்துக் கொள்ளுங்கள். அண்மையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட எனது பெற்றோர் நன்றாக குணமடைந்து வருகிறார்கள். அவர்கள் ஆரோக்கியத்துடன் திரும்பியதற்காக இந்தப் பிரபஞ்சத்திற்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்’ என்று பதிவிட்டிருக்கிறார்.

கொரோனாத் தொற்றின் இரண்டாவது அலையில் திரையுலக நட்சத்திரங்களும், அரசியல் பிரபலங்களும் என பலர் பாதிப்புக்குள்ளாகி வருகிறார்கள். தற்போது அந்தப் பட்டியலில் நடிகை சம்யுக்தா ஹெக்டேவும் இணைந்திருக்கிறார்.

இவரும் ஏனைய நடிகைகளைப் போல் விரைவில் இத்தொற்று பாதிப்பிலிருந்து மீண்டு வர வேண்டும் என்று அவரது இரசிகர்கள் பிரார்த்தனை செய்கிறார்கள்.

http://Facebook page / easy 24 news

Previous Post

அவுஸ்திரேலியாவில் பாடசாலை மாணவர்கள் நூதனப் போராட்டம்

Next Post

சஜித்துடன் உறுதியான உடன்பாடு வேண்டும் | கிருபா பிள்ளை பக்கம்

Next Post
உயிர் பிரிந்த கணங்கள் இப்போதும் மனதை உடைக்கிறது | கிருபா பிள்ளை பக்கம்

சஜித்துடன் உறுதியான உடன்பாடு வேண்டும் | கிருபா பிள்ளை பக்கம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures