Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

கோத்தபாயவிற்கு ஒத்துழைப்பு வழங்குவேன் – சஜித்

November 18, 2019
in News, Politics, World
0
இந்­நாட்டின் பிரஜை என்ற வகையில், ஒரு­மித்த நாட்­டிற்குள் அனைத்து இன,மத மக்­க­ளையும் ஒன்­றி­ணைத்து சுபீட்­ச­மா­ன­தொரு நாட்டைக் கட்­டி­யெ­ழுப்­பு­வ­தற்கு அவ­சி­ய­மான ஒத்­து­ழைப்பை ஜனா­தி­பதி கோத்­த­பாய ராஜ­ப­க் ஷ­விற்கு நான் தொடர்ந்தும் வழங்­குவேன் என்று புதிய ஜன­நா­யக முன்­ன­ணியின் சார்பில் தேர்­தலில் போட்­டி­யிட்ட சஜித் பிரே­ம­தாச தெரி­வித்தார்.
இலங்கை ஜன­நா­யக சோச­லிச குடி­ய­ரசின் ஏழா­வது ஜனா­தி­ப­தியைத் தெரிவு செய்­வ­தற்­கான எட்­டா­வது ஜனா­தி­பதித் தேர்­தலின் முடி­வு­களை உத்­தி­யோ­க­பூர்­வ­மாக அறி­விக்கும் நிகழ்வு நேற்று ஞாயிற்­றுக்­கி­ழமை கொழும்­பி­லுள்ள சுயா­தீன தேர்­தல்கள் ஆணைக்­கு­ழுவில் நடை­பெற்­றது. அந்­நி­கழ்வில் தேர்­தல்கள் ஆணை­யா­ள­ரினால் முடி­வுகள் அறி­விக்­கப்­பட்ட பின்னர், உரை­யாற்­றிய போதே சஜித் பிரே­ம­தாச இவ்­வாறு குறிப்­பிட்டார்.
அவர் அங்கு மேலும் கூறி­ய­தா­வது:
நாட்டின் அனைத்துப் பாகங்­களில் இருந்தும் எனக்­காக வாக்­க­ளித்த அனைத்து மக்­க­ளுக்கும் எனது இத­ய ­பூர்­வ­மான நன்­றியைத் தெரி­வித்துக் கொள்­கின்றேன். நீங்கள் என்­மீது நம்­பிக்கை வைத்­தமை குறித்து மகிழ்­வ­டை­கிறேன். எனது 26 வருட அர­சியல் பய­ணத்தை வலுப்­ப­டுத்­து­வ­தற்கு உங்­க­ளு­டைய ஆத­ரவு பெரும் உறு­து­ணை­யாக அமைந்­தி­ருந்­தது. அதே­போன்று எனது தேர்தல் பிர­சா­ரக்­கூட்­டங்­களில் ஓய்­வின்றிப் பணி­யாற்­றிய அனை­வ­ருக்கும் நன்றி தெரி­வித்துக் கொள்­கிறேன். நானும், எனது குடும்­பத்­தி­னரும் உங்­க­ளு­டைய அர்ப்­ப­ணிப்­புக்­களை ஒரு­போதும் மறக்­க­மாட்டோம்.
எமது நாடு சுதந்­திரம் அடைந்­த­தி­லி­ருந்து மிகவும் அமை­தி­யான ஜனா­தி­பதித் தேர்­தலை இம்­முறை கண்­டி­ருக்­கிறோம். கடந்த ஐந்து வரு­ட­கா­ல­மாக வலுப்­ப­டுத்­தப்­பட்ட ஜன­நா­யகம் மற்றும் சுயா­தீன கட்­ட­மைப்­புக்­களின் மறு­சீ­ர­மைப்பு என்­ப­வற்றின் விளைவே இது­வாகும். அவற்றின் ஊடா­கவே சுயா­தீன தேர்­தல்கள் ஆணைக்­கு­ழுவை ஸ்திரப்­ப­டுத்த முடி­யு­மாக இருந்­த­துடன், சட்­டத்தின் ஆட்­சியும் நிலை­நாட்­டப்­பட்­டது.
மேலும் சுதந்­தி­ர­மா­னதும், நியா­ய­மா­ன­து­மான தேர்­தலை நடத்­து­வ­தற்­கான தலை­மைத்­து­வத்தை வழங்­கிய தேர்­தல்கள் ஆணை­யா­ள­ருக்கும், ஆணைக்­கு­ழுவின் ஏனைய உறுப்­பி­னர்­க­ளுக்கும், இதில் பங்­க­ளிப்­புச்­செய்த அனைத்து அரச உத்­தி­யோ­கத்­தர்­க­ளுக்கும் எனது நன்­றியைத் தெரி­வித்­துக்­கொள்­கின்றேன். ஒருமித்த நாட்டிற்குள் அனைத்து இன,மத மக்களையும் ஒன்றிணைத்து சுபீட்சமானதொரு நாட்டைக் கட்டியெழுப்புவதற்கு அவசியமான ஒத்துழைப்பை ஜனாதிபதியாகத் தெரிவாகியுள்ள கோத்தபாய ராஜபக் ஷவிற்கு இந்நாட்டின் ஒரு பிரஜை என்ற வகையில் நான் வழங்குவேன் என்றும் கூறிக்கொள்ள விரும்புகின்றேன்.
Previous Post

இலங்கை மாணவரை மாட்டிவிட்ட விவகாரம் குற்றத்தை ஒப்புக்கொண்ட நபர்

Next Post

கோத்தாபய சிறப்பான ஆட்சிக்கு, வித்திடுவார் என்று நம்புகின்றேன் – விக்னேஸ்வரன்

Next Post

கோத்தாபய சிறப்பான ஆட்சிக்கு, வித்திடுவார் என்று நம்புகின்றேன் - விக்னேஸ்வரன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures