Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

கோத்­த­பாய , பசில் இருவருக்கும் வரும் ஆறாம் திகதி விசாரணை

June 2, 2018
in News, Politics, World
0

முன்­னாள் அரச தலை­வர் மகிந்த ராஜ­பக்­ச­வின் சகோ­த­ரர்­க­ளான கோத்­த­பாய ராஜ­பக்ச மற்­றும் பசில் ராஜ­பக்ச இரு­வ­ருக்­கும் எதி­ரான வழக்­கு­கள் எதிர்­வ­ரும் 6ஆம் திகதி விசா­ர­ணைக்கு எடுத்­துக் கொள்­ளப்­ப­ட­வுள்­ளன.

அவன்­கார்ட் வழக்­கி­லி­ருந்து தான் உள் ளிட்ட பிர­தி­வா­தி­களை விடு­தலை செய்ய வேண்­டும் என்று முன்­னாள் பாது­காப்­புச் செய­லர் கோத்­த­பாய ராஜ­பக்ச தாக்­கல்­செய்­துள்ள மீள்­ப­ரி­சீ­லனை மனு எதிர்­வ­ரும் 6ஆம் திகதி விசா­ர­ணைக்கு எடுத்­துக்­கொள்­ளப்­ப­டும் என்று மேன்­மு­றை­யீட்டு நீதி­மன்­றம் அறி­வித்­துள்­ளது.

இந்த வழக்கு நீதி­ப­தி­க­ளான குமு­தினி விக்­கி­ர­ம­சிங்க மற்­றும் ஜகத் த சில்வா ஆகி­யோர் முன்­னி­லை­யில் நேற்று விசா­ர­ணைக்கு எடுத்­துக்­கொள்­ளப்­பட்­ட­போதே இந்த உத்­த­ரவு பிறப்­பிக்­கப்­பட்­டுள்­ளது.அரச நிதி­யைத் தவ­றா­கப் பயன்­ப­டுத்­தி­னார் எனக் குற்­றம் சுமத்தி முன்­னாள் பொரு­ளா­தார அபி­வி­ருத்தி அமைச்­சர் பசில் ராஜ­பக்ச உள்­பட 4 சந்­தேக நபர்­க­ளுக்கு எதி­ரா­கத் தாக்­கல் செய்­யப்­பட்­டுள்ள மனு எதிர்­வ­ரும் 6ஆம் திக­திக்கு கொழும்பு மேல் நீதி­மன்­றத்­தால் ஒத்­தி­வைக்­கப்­பட்­டுள்­ளது.

கடந்த அரச தலை­வர் தேர்­தல் காலத்­தில் குறைந்த வரு­மா­னம் பெறு­வோ­ருக்கு வீடு வழங்­கு­வ­தற்­காக பயன்­ப­டுத்­தப்­பட்ட 2 ஆயி­ரத்து 992 மில்­லி­யன் ரூபா நிதி தவ­றா­கப் பயன்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளது எனக் கூறி இந்த வழக்கு தாக்­கல்­செய்­யப்­பட்­டுள்­ளது.

பொதுச் சொத்­து­கள் சட்­டத்­தின் கீழ் சட்­டமா அதி­ப­ரால் தாக்­கல் செய்­யப்­பட்­டுள்ள இந்த வழக்­கில், முன்­னாள் பொரு­ளா­தார அபி­வி­ருத்தி அமைச்­சர் பசில் ராஜ­பக்ச, அந்த அமைச்­சின் முன்­னாள் செய­லர் நிகால் ஜய­தி­லக்க, வாழ்­வின் எழுச்­சித் திணைக்­க­ளத்­தின் முன்­னாள் பணிப்­பா­ளர் நாய­கம் கித்­சிறி ரண­வக்க, அந்­தத் திணைக்­க­ளத்­தின் முன்­னாள் பிர­திப் பணிப்­பா­ளர் நாய­கம் பந்­துல தில­க­சிறி ஆகி­யோர் பிர­தி­வா­தி­க­ளா­கப் பெய­ரி­டப்­பட்­டுள்­ள­னர்.

வழக்­கின் சாட்சி விசா­ர­ணை­கள் நேற்று இடம்­பெற்­ற­து­டன், சாட்­சி­யா­ளர்­க­ளும் நீதி­மன்­றில் முன்­னி­லை­யா­கி­யி­ருந்­த­னர். வழக்கு எதிர்­வ­ரும் 6ஆம் திக­திக்கு பிற்­போ­டப்­பட்­டது. சாட்­சி­யா­ளர்­களை அன்று மன்­றில் முன்­னி­லை­யா­கு­மாறு நீதி­பதி ஆர்.குரு­சிங்க உத்­த­ர­விட்­டார்.

Previous Post

வன்­கொ­டு­மை­கள் தொடர்­பில் முறைப்­பாடு செய்ய மாண­வர்­கள் முன்­வர வேண்­டும்

Next Post

பிணை­முறி மோசடி விசா­ரணை அறிக்­கையை வெளிப்­ப­டுத்த முடிவு

Next Post

பிணை­முறி மோசடி விசா­ரணை அறிக்­கையை வெளிப்­ப­டுத்த முடிவு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures