Thursday, September 11, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

கோட்டா மகிந்த உட்பட நால்வருக்கு எதிராக தடைகள் | கனடா அறிவிப்பு

January 11, 2023
in News, Sri Lanka News, முக்கிய செய்திகள்
0
கோட்டா மகிந்த உட்பட நால்வருக்கு எதிராக தடைகள் | கனடா அறிவிப்பு

கனடா முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்ச உட்பட நால்வருக்கு எதிராக தடைகளை விதித்துள்ளது.

சார்ஜன்ட் சுனில் ரத்நாயக்க லெப்கொமாண்டர் சந்தன ஹெட்டியாராச்சி ஆகியோருக்கு எதிராகவும் கனடா தடைகளை அறிவித்துள்ளது.

இலங்கையில் 1983 ம் ஆண்டு முதல் 2009 ம் ஆண்டு வரை இடம்பெற்ற ஆயுதமோதலின் போது மனித உரிமைகளை பாரியளவில் திட்டமிட்டு மீறியமைக்காக நான்கு இலங்கை அதிகாரிகளிற்கு எதிராக சிறப்பு பொருளாதாரநடவடிக்கைகள் சட்டத்தின் கீழ் கனடா இலக்குவைக்கப்பட்ட தடைகளை விதித்துள்ளது என கனடாவின் வெளிவிவகார அமைச்சர் மெலானி ஜொய் தெரிவித்துள்ளார்.

சிறப்பு பொருளாதார நடவடிக்கைகள் சட்டத்தின் கீழ் உள்ள விதிமுறைகள் பட்டியலிப்பட்ட நபர்களிற்கு பரிவர்த்தன தடையை விதிக்கின்றன,இது கனடாவில் அவர்கள் வைத்திருக்கும் எந்தவொரு சொத்துக்களையும் திறம்பட முடக்கி கனடாவின் குடிவரவு சட்டத்தின் கீழ் அவர்கள் கனடாவிற்குள் நுழைய முடியாதவர்களாக்குகின்றது.

கனடாவும் சர்வதேச சமூகமும் தொடர்ச்சியாக பொறுப்புக்கூறலிற்கான வேண்டுகோளை விடுத்துள்ள போதிலும் இலங்கை அரசாங்கம் தனது மனித உரிமை கடப்பாடுகளை நிறைவேற்ற மட்டுப்படுத்தப்பட்ட நடவடிக்கைகளையே எடுத்துள்ளது, இது பாதிக்கப்பட்ட மக்களிற்கான நீதி கிடைப்பதில் முன்னேற்றத்தை தடுக்கின்றது,அமைதி நல்லிணக்கத்திற்கான வாய்ப்புகளையும் பாதிக்கின்றது.

மிகமோசமான மனித உரிமைமீறல்களால் பாதிக்கப்பட்ட தப்பிப்பிழைத்தவர்களிற்கு நீதி அவசியம் இதன் காரணமாகவே இலங்கை அர்த்தபூர்வமான பொறுப்புக்கூறல் நடவடிக்கையை உருவாக்குவது குறித்த தனது உறுதிமொழிகளை நிறைவேற்றவேண்டும் என கனடா வேண்டுகோள் விடுத்துவருகி;ன்றது.

இலங்கையில் பாரிய மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டவர்களிற்கு தண்டனையின் பிடியிலிருந்த விலக்களிக்கப்படுவதை கனடா ஒருபோதும் ஏற்றுக்கொள்ளாது என்பதற்கான உறுதி செய்தி இது எனவும் கனடாவின் வெளிவிவகார அமைச்சர் தெரிவித்துள்ளார்.

Previous Post

விரைவில் உத்தியோகபூர்வமாக அறிவிப்பேன் | சம்பந்தன்

Next Post

சக்தி வாய்ந்த மற்றும் திறமையான இந்தியாவின் குரலை வெளிநாடு வாழ் இந்தியர்கள் எதிரொலிக்கிறார்கள் | இந்தியப் பிரதமர் மோடி புகழாரம்

Next Post
சக்தி வாய்ந்த மற்றும் திறமையான இந்தியாவின் குரலை வெளிநாடு வாழ் இந்தியர்கள் எதிரொலிக்கிறார்கள் | இந்தியப் பிரதமர் மோடி புகழாரம்

சக்தி வாய்ந்த மற்றும் திறமையான இந்தியாவின் குரலை வெளிநாடு வாழ் இந்தியர்கள் எதிரொலிக்கிறார்கள் | இந்தியப் பிரதமர் மோடி புகழாரம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures