Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

கோட்டாவுக்கு எதிரான வழக்கு விசாரணைகள் ஒத்திவைப்பு

October 15, 2019
in News, Politics, World
0

டீ.ஏ.ராஜபக்ஷ நினைவுத் தூபி மற்றும் நூதனசாலை அமைப்பதற்கு அரச நிதியைப் பயன்படுத்தியதாக தெரிவித்து முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ உள்ளிட்ட 7 பேருக்கு எதிராக கொழும்பு விசேட மேல் நீதிமன்றில் இடம்பெறும் வழக்கு விசாரணைகள் பிற்போடப்பட்டுள்ளன.

அதற்கமைய குறித்த வழக்கு விசாரணைகள் ஜனவரி மாதம் 9ஆம் திகதி வரையில் பிற்போடப்பட்டுள்ளதாக விசேட மேல் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

வீரகெட்டிய, மெதமுலன டீ.ஏ.ராஜபக்ஷ ஞாபகார்த்த கோபுரம் மற்றும் நூதனசாலை நிர்மாண பணிகளுக்காக 33.9 மில்லியன் ரூபாய் அரச பணத்தை தவறாக பயன்படுத்தியமை உள்ளிட்ட 7 குற்றச்சாட்டுக்களின் கீழ் கோட்டாபய ராஜபக்‌ஷவுக்கு எதிராக, மூவரடங்கிய விசேட மேல் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் கோட்டாபய ராஜபக்ஷவினால் தாக்கல் செய்யப்பட்டுள்ள விஷேட மேன்முறையீட்டு மனு, உயர் நீதிமன்ற நீதியரசர்களான எல்.டி.பி.தெஹிதெனிய, எஸ். துறைராஜா மற்றும் காமினி அமரசேகர ஆகிய மூவரடங்கிய நீதியரசர்கள் விசாரத்து வருகின்றனர்.

இதேவேளை, இதற்கு முன்னதாக இலங்கை காணி மீட்பு மற்றும் அபிவிருத்தி கூட்டுத்தாபனத்துக்கு சொந்தமான 33.9 மில்லியன் ரூபாய் பணத்தை நம்பிக்கை மோசடி செய்தமை தொடர்பாக கோட்டாபய ராஜபக்ஷ உள்ளிட்ட 7 பிரதிவாதிகளுக்கு எதிராக சட்ட மா அதிபர் நிரந்தர விசேட மேல் நீதிமன்றில் வழக்குத் தொடுத்தமையும் குறிப்பிடத்தக்கது

Previous Post

கொழும்பு துறைமுக நுழைவாயிலில் சடலம் கண்டெடுப்பு

Next Post

நான்கு இளைஞர்கள் கைது !

Next Post

நான்கு இளைஞர்கள் கைது !

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures