Sunday, September 7, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

கோட்டாவின் முடிவு எவ்வாறு அமைந்தது என்பதை ஜனாதிபதி ரணில் நினைவில் கொள்க | அநுர

February 25, 2023
in News, Sri Lanka News, முக்கிய செய்திகள்
0
கோட்டா – ரணில் மோதல் உக்கிரம்

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மக்களால் தெரிவு செய்யப்பட்ட அரச தலைவர் அல்ல ஆகவே அவருக்கு தேர்தல்,மக்களின் நிலைப்பாடு தொடர்பில் அக்கறை இல்லை, தான் குறிப்பிடுவதே அரச சுற்றறிக்கை என்று சர்வாதிகாரமாக செயற்பட்ட முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் முடிவு எவ்வாறு அமைந்தது என்பதை ஜனாதிபதி என்றும் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும்.

ஜனாதிபதியின் அரசியலமைப்பிற்கு முரணான செயற்பாட்டுக்கு நீதிமன்றத்தின் ஊடாக பதிலடி கொடுப்போம் என மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார்.

மக்கள் விடுதலை முன்னணியின் காரியாலயத்தில் வெள்ளிக்கிழமை (24) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிட்டதாவது,

ஜனநாயகத்திற்கும்,அரசியலமைப்பிற்கும் எதிராக செயற்படும் போது ஏற்படும் விளைவை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வெகுவிரைவில் விளங்கிக் கொள்வார்.

அரசியலமைப்பிற்கு எதிராக செயற்பட்ட முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு உயர்நீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மீட்டிப்பார்க்க வேண்டும்.

உள்ளூராட்சிமன்றத் தேர்தலுக்கு நீதிமன்றத்தின் ஊடாக எவ்வித தடைகளும் ஏற்படுத்தப்படவில்லை.தேர்தலை பிற்போடுமாறு அரசாங்கத்திற்கு சார்பான நபர் உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த எழுத்தாணை மனுவை விசாரணைக்கு எடுத்துக் கொள்வதை உயர்நீதிமன்றம் பிற்போட்டுள்ளது.

தனது அரசியல் தேவைகளுக்காக நாட்டு மக்களின் ஜனநாயக உரிமையை இல்லாதொழிக்கும் ஜனாதிபதியின் முறையற்ற செயற்பாடுகளுக்கு நீதிமன்றத்தின் ஊடாக பதிலடி கொடுப்போம். அத்துடன் ஜனநாயகத்திற்கு எதிராக முன்னெடுக்கப்படும் செயற்படுகள் தொடர்பில் சர்வதேச மட்டத்திற்கு செல்வோம்.

உள்ளூராட்சிமன்றத் தேர்தல் தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பாராளுமன்றத்தில் முன்வைத்த விடயங்கள் அனைத்தும் பொய்யானது.

தேர்தலை பிற்போட வேண்டிய தேவை கிடையாது ஏனெனில் நாட்டில் தேர்தல் என்பதொன்று இல்லை என்று குறிப்பிட்டு  நாட்டு மக்களின் ஜனநாயகத்தை கேலிக்கூத்தாக்கியுள்ளார்.

உள்ளூராட்சிமன்றத் தேர்தலுக்கு உத்தியோகப்பூர்வமான அறிவிப்பு விடுக்கவில்லை என ஜனாதிபதி குறிப்பிடுகிறார்.

அவ்வாறாயின் ஐக்கிய தேசியக் கட்சி ஏன் தேர்தலுக்கு கட்டுப்பணம் செலுத்தி,வேட்பு மனுத்தாக்கல் செய்தது,இல்லாத தேர்தலுக்கு ஏன் ஐக்கிய தேசியக் கட்சி தயாராக வேண்டும்.

இல்லாத தேர்தலுக்கு தயாராகியுள்ளமைக்கு ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க பொறுப்புக் கூற வேண்டும்.

உள்ளூராட்சிமன்றத் தேர்தலுக்கு நிதி இல்லை என ஜனாதிபதி குறிப்பிடுவதை ஏற்றுக்கொள்ள முடியாது,ஏனெனில் வரவு செலவுத் திட்டத்தின் ஊடாக தேர்தலுக்கு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

உள்ளூராட்சிமன்றத் தேர்தல் அல்ல எந்தத் தேர்தல் இடம்பெற்றாலும் ஐக்கிய தேசியக் கட்சியும்,ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவும் படுதோல்வி அடைவது உறுதி,ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மக்களால் தெரிவு செய்யப்பட்ட அரச தலைவர் அல்ல ஆகவே அவருக்கு தேர்தல்,மக்களின் நிலைப்பாடு தொடர்பில் அக்கறையில்லை,தான் குறிப்பிடுவதே அரச சுற்றறிக்கை என்று சர்வாதிகரமாக செயற்பட்ட முன்னாள் ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ஷவின் முடிவு எவ்வாறு அமைந்தது என்பதை ஜனாதிபதி என்றும் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும்.

உள்ளூராட்சிமன்றத் தேர்தலுக்கான தேர்தல் பிரசாரங்களை நாங்கள் தொடர்ந்து முன்னெடுப்போம். ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் தேர்தலை தான் பிற்போட முடியும்,ஆனால் மக்களாணையை அவரால் ஒருபோதும் வெற்றிக் கொள்ள முடியாது. அடுத்த முறை தேசிய பட்டியல் ஊடாக கூட பாராளுமன்றத்திற்கு வர முடியாத நிலையே அவருக்கு ஏற்படும் என்றார்.

Previous Post

சம்பளத்துடன் ஒரு மாதம் விடுமுறை! புதுமண தம்பதிகளுக்கு புதிய திட்டம்

Next Post

கல்வி அமைச்சில் ஆசிரியர்களை தாக்கியது ஏன்? ஐக்கிய மக்கள் சக்தி கடிதம்

Next Post
யுத்தவெற்றியை நிலையான விடுதலையாக்க 13ஆவது திருத்தத்தை செயற்படுத்துக! – சஜித் பிரேமதாச

கல்வி அமைச்சில் ஆசிரியர்களை தாக்கியது ஏன்? ஐக்கிய மக்கள் சக்தி கடிதம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures