Wednesday, August 27, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

கோட்டாவின் நிலை விரைவில் ஜனாதிபதி ரணிலுக்கும் | விமல் எச்சரிக்கை

October 16, 2022
in News, Sri Lanka News, முக்கிய செய்திகள்
0
பொருளாதார நெருக்கடியிலிருந்து மீள்வதற்கான திட்டமெதுவம் வரவு – செலவுத் திட்டத்தில் இல்லை | விமல்

அமெரிக்காவின் ஆலோசனைகளுக்கு முன்னுரிமை வழங்கியதால் முன்னாள் ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ஷ அரசியல் சூழ்ச்சியினால் பதவி துறந்தார்.ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவும் வெகுவிரைவில் நெருக்கடிக்குள்ளாவார்.

பொருளாதார ரீதியில் பாதிக்கப்பட்டுள்ள மக்களை சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனைகள் மேலும் நெருக்கடிக்குள்ளாக்கியுள்ளது என தேசிய சுதந்ரதிர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச தெரிவித்தார்.

மாத்தறை பகுதியில் சனிக்கிழமை (15) இடம்பெற்ற  மேலவை இலங்கை கூட்டணியின் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிட்டதாவது,

சுதந்திரத்தின் பின்னரான காலப்பகுதியில் நாடு மிக மோசமான பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டுள்ளது.

பொருளாதார நெருக்கடி அரசியல் ரீதியில் மோசமான விளைவுகளை ஏற்படுத்தும் என முன்னாள் ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ஷவிடம் பலமுறை எடுத்துரைத்தோம்.

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன தலைமையிலான அரசாங்கம் பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காண எவ்வித நடவடிக்கைகளையும் எடுக்கவில்லை.மாறாக விளைவுகளை முன்கூட்டியதாக எடுத்துரைத்த நாங்கள் அமைச்சு பதவிகளில் இருந்து நீக்கப்பட்டோம்.

மேற்குலக நாடுகளின் கட்டளைகளுக்கு அடிபணிய போவதில்லை என குறிப்பிட்ட முன்னாள் ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ஷ இறுதியில் அமெரிக்காவின் ஆலோசனைக்கமைய செயற்பட ஆரம்பித்தார்.இறுதியில் மக்கள் போராட்டத்தின் ஊடாக பதவி விலக நேரிட்டது.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அமெரிக்காவின் கட்டளைக்கமைய செயற்படுகிறார்.சர்வதேச நாணய நிதியத்தின் ஒத்துழைப்பை பெற்றுக்கொள்வது மாத்திரமே பொருளாதார மீட்சிக்கான இறுதி திர்வாக அமையும் என அவர் குறிப்பிடுகிறார்.

சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனைகளுக்கு அமைய வரி அதிகரிப்பு வீதம் சடுதியாக அதிகரிக்கப்பட்டுள்ளன.

நாணய நிதியத்தின் 2.9 பில்லியன் டொலர் கிடைப்பது தற்போது பொருளாதார ரீதியில் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு ஒருபோதும் நிவாரணத்தை பெற்றுக்கொடுக்காது.

பொருளாதார ரீதியில் பாதிக்கப்பட்டுள்ள மக்கள் சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனைகளினால் மேலும் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.

மக்களை பொருளாதார நெருக்கடிக்குள்ளாக்கி,மக்கள் போராட்டத்தை தீவிரப்படுத்தி தேசியத்தை பலவீனப்படுத்தும் முயற்சிகள் தற்போது முன்னெடுக்கப்படுகின்றன.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அரசாங்கத்துக்கு மக்கள் அங்கிகாரம் கிடையாது.மக்களின் ஒத்துழைப்பு இருந்தால் மாத்திரமே பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காண முடியும்.

தமக்கான அரசாங்கத்தை தெரிவு செய்துக் கொள்ள நாட்டு மக்களுக்கு வாய்ப்பளிக்க வேண்டும்.அரசியல் ரீதியில் பெரும்பாலான தரப்பினர் எம்முடன் ஒன்றிணைவார்கள் என்றார்.

Previous Post

இன்று மின்வெட்டு அமுலாகும் நேர அட்டவணை

Next Post

‘மிகுந்த நம்பிக்கையோடு உலகக் கிண்ணத்தை எதிர்கொள்கிறோம்’ | தசுன் ஷானக்க

Next Post
‘மிகுந்த நம்பிக்கையோடு உலகக் கிண்ணத்தை எதிர்கொள்கிறோம்’ | தசுன் ஷானக்க

'மிகுந்த நம்பிக்கையோடு உலகக் கிண்ணத்தை எதிர்கொள்கிறோம்' | தசுன் ஷானக்க

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures