வெள்ளவத்தை டபிள்யு.ஏ.சில்வா மாவத்தையில் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவின் தனிப்பட்ட காரியாலயம் ஒன்று அமைக்கப்படவுள்ளதாக வெளியாகும் செய்தி பொய்யானது என அவரது ஊடகப் பேச்சாளர் மிலிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.
கோட்டாபய ராஜபக்ஷவின் பெயரில் இக்காரியாலயம் அமைக்கப் போவதாக சிலர் செய்தி வெளியிட்டுள்ளனர். இந்த செய்தியை அவரின் ஊடகப் பேச்சாளர் எனும் வகையில் மறுக்கின்றேன்.
இவ்வாறு காரியாலயம் அமைப்பதற்கு அவர் நடவடிக்கை எடுக்கவும் இல்லை. இவ்வாறு காரியாலயம் ஒன்றை அமைப்பதற்கு வேறு ஒருவருக்கு பொறுப்பளிக்கவும் இல்லையெனவும் அவர் கூறினார்.
வெளியான செய்தி தொடர்பில் அவரிடம் விளக்கம் கோரியபோதே இதனைக் கூறியுள்ளார்.

