முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கு குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முன்னிலையாகுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதன்படி, எதிர்வரும் 13ஆம் திகதி கோட்டாபய ராஜபக்சவை விசாரணைக்கு வருமாறு சிஐடி அழைத்துள்ளதாக தெரியவருகின்றது.
வாக்குமூலம்
கொழும்புக்கு அருகில் அமைந்துள்ள ஒரு வீட்டுத் தொகுதிக்குச் சொந்தமான பல வீடுகளை பல நபர்களுக்கு சட்டவிரோதமாக ஒதுக்கியதை அங்கீகரிக்கும் கடிதங்கள் வெளியிடப்பட்டது குறிது வாக்குமூலம் பெறவே இந்த அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

கோட்டாபய ராஜபக்ச பாதுகாப்புச் செயலாளராக இருந்தபோது இந்த சம்பவம் நடந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
அதன்படி, இது தொடர்பாக முன்னாள் ஜனாதிபதிக்கு கடந்த வெள்ளிக்கிழமை (6) எழுத்துப்பூர்வ அறிவிப்பு அனுப்பப்பட்டுள்ளது.
