Tuesday, August 26, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

கோட்டாபயவின் பெயரை மகிந்த உச்சரித்தமை தவறு

October 10, 2022
in News, Sri Lanka News, முக்கிய செய்திகள்
0
போராட்டங்களை முன்னெடுக்கும் ஒவ்வொரு நிமிடமும் நாட்டிற்கு கிடைக்கும் டொலர்களை வெகுவாக பாதிக்கும் | மகிந்த

முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்சவை கடந்த மே மாதம் 9 ஆம் திகதி தவறாக வழிநடத்தியவர்கள் தற்போது மீண்டும் அவரை மேடைக்கு ஏற்றி நாட்டு மக்களை தவறாக வழிநடத்த முயற்சிக்கிறார்கள் என பொதுஜன பெரமுனவின் ஆதரவாளரும்,ராஜபக்சக்களின் நெருங்கிய சகாவுமாகிய நாடாளுமன்ற உறுப்பினர் டிலான் பெரேரா தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று (10) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் மேலும் தெரிவித்ததாவது,

மே 9 வெடித்த போராட்டம்

”முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்ச மே மாதம் 9ஆம் திகதியன்று காலை அல்லது அதற்கு முன்னர் பதவி விலகியிருந்தால் நாட்டில் வன்முறை தீவிரமடைந்து பேரழிவு ஏற்பட்டிருக்காது. அரசியலில் அவரும் கௌரவமாக இருந்திருப்பார்.

மே மாதம் 09 ஆம் திகதி அப்போதைய பிரதமர் மகிந்த ராஜபக்சவுக்கு ஆதரவு வழங்குவதாக கூறிக்கொண்டு ஒருசிலர் அலரிமாளிகையில் கூட்டத்தை நடத்தினர்.

காலிமுகத்தில் போராட்டகளத்தின் மீது தாக்குதல் நடத்துமளவுக்கு அங்கு உத்வேகம் வழங்கப்பட்டது.

பொதுமக்கள் கூட்டத்தில் மகிந்த கருத்து

களுத்துறையில் இடம்பெற்ற நிகழ்வின்போது முன்னாள் பிரதமர் மமகிந்த ராஜபக்ச ஆற்றிய உரை கவனிக்கத்தக்கது.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் செயற்பாடுகளுக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என கூறினார்,

அதன்போது அருகில் இருந்தவர் தற்போது ரணில் என குறிப்பிட்டதன் பின்னரே அவர் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தொடர்பில் உரையாற்றினார்” எனவும் டிலான் பெரேரா இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார்.

Previous Post

சிவகார்த்திகேயன் நடிக்கும் ‘பிரின்ஸ்’ படத்தின் முன்னோட்டம் வெளியீடு

Next Post

கடல் வழி இந்தியா செல்ல முயன்றவர்கள் கைது!

Next Post
சிறையில் இருக்கும் புலி சந்தேகநபர் சாதாரண தர பரீட்சையில் சித்தி!

கடல் வழி இந்தியா செல்ல முயன்றவர்கள் கைது!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures