Tuesday, August 26, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

கொவிட் மரணங்களுக்கு அரசாங்கமே பொறுப்பு : சஜித் பிரேமதாச

August 20, 2021
in News, Sri Lanka News
0
யுத்தவெற்றியை நிலையான விடுதலையாக்க 13ஆவது திருத்தத்தை செயற்படுத்துக! – சஜித் பிரேமதாச

நாட்டில் இதுவரை பதிவாகியுள்ள அதிகமான கொரோனா நோயாளிகளின்  மரணத்துக்கு அரசாங்கம் பொறுப்புக் கூற வேண்டும். இந்தப் பொறுப்பில் இருந்து விலகிக் கொள்ளுவதற்கான எந்தவொரு உரிமையும் அரசாங்கத்திற்கு இல்லை என்று எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

வைரசுடன் போராட வேண்டியது விஞ்ஞான ரீதியாகவே அன்றி தன்னிச்சையான அரசியல் ரீதியாகவும்,  மாயைகளை அடிப்படையாகக் கொண்ட மூட நம்பிக்கை மூலமும் அல்ல என்றும் எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச சுட்டிக்காட்டியுள்ளார்.

 

இது தொடர்பில் இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

சிந்தித்து செயலாற்றும் எந்தவொருவரும் அதிர்ச்சிக்குள்ளாகுமளவுக்கு எமது நாடு சீர்குலைந்துள்ளது.

கடந்த வாரம் காணப்பட்ட கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை மற்றும் அறிக்கையிடப்பட்ட மரணங்களின் எண்ணிக்கையை மாத்திரம் கணக்கில் எடுத்துக் கொண்டாலும் நாடு என்ற வகையில் நாங்கள் தள்ளப்பட்டுள்ள இடம் பயங்கரமானது, இருள்மிக்கது.

முன்மாதிரி நிலையிலுள்ள எவரும் இந்த நிலைமையை சிறந்ததென கருத மாட்டார்கள் ஆனாலும் அரசாங்கம் அது பற்றி எந்தவித கவனமும் எடுத்துக் கொள்ளவில்லை என்பது மட்டும் உறுதி.

இது வரை ஏற்பட்ட அதிகமான கொரோனா நோயாளிகளின்  மரணத்துக்கு அரசாங்கம் பொறுப்புக் கூற வேண்டும் என்பதோடு இந்தப் பொறுப்பில் இருந்து அரசாங்கம் விலகிக் கொள்ளுவதற்கான எந்தவொரு உரிமையும் இல்லை.

கவலையான விடயம் யாதெனில் முதலாவது மற்றும் இரண்டாவது கொரோனா நோயாளிகள் இந்நாட்டில் கண்டுபிடிக்கப்பட்டபோது எடுத்த நடவடிக்கைகளையாவது தற்போது பல்லாயிரக்காணக்கான கொரோனா நோயாளர்கள் காணப்படும் போது எடுக்கவில்லை.

அந்தளவுக்கு அரசாங்கம் இந்த பேரழிவின் அபாயங்களை கவனத்தில் எடுத்துக் கொள்ளவில்லை எனவும் அவர் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

http://Facebook page / easy 24 news

Previous Post

முடங்குகிறது இலங்கை! வெளியானது அதிகாரபூர்வ அறிவிப்பு!!

Next Post

அதிபர் – ஆசிரியர்களின் சம்பள முரண்பாடு குறித்து அமைச்சரவை உபகுழு உறுதியளித்துள்ளது என்ன

Next Post
அதிபர் – ஆசிரியர்களின் சம்பள முரண்பாடு குறித்து அமைச்சரவை உபகுழு உறுதியளித்துள்ளது என்ன

அதிபர் - ஆசிரியர்களின் சம்பள முரண்பாடு குறித்து அமைச்சரவை உபகுழு உறுதியளித்துள்ளது என்ன

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures