உலக அளவில் கொவிட் தொற்றினால் உயிரிழப்போரின் எண்ணிக்கை குறைந்து வருவதாக உலக சுகாதார ஸ்தாபனம் தெரிவித்துள்ளது.
சீனாவின் வுகான் நகரில் 2019 ஆம் ஆண்டு கொவிட் வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது.
தற்போது கொவிட் வைரஸ் பல நாடுகள் உள்ளிட்ட பிரதேசங்களுக்கு பரவி பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது.
கொவிட் வைரஸை கட்டுப்படுத்த தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையிலும் உருமாற்றமடைந்துவரும் கொவிட் வைரஸ் தொடர்ந்து பரவிவருகிறது.
இந்நிலையில், உலக அளவில் கொவிட் தொற்றினால் உயிரிழப்போரின் எண்ணிக்கை குறைந்து வருவதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக உலக சுகாதார ஸ்தாபனத்தின் தலைவர் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ் கூறுகையில்,
” கொவிட் தொற்றினால் ஏற்பட்ட அச்சுறுத்தல் முடிவுக்கு வருவதுபோல் உள்ளது. கொவிட்டினால் உயிரிழப்போர் எண்ணிக்கை கடந்த 2 ஆண்டுகளுக்கு பிறகு கடந்த வாரம் குறைந்துள்ளது.
கொவிட் தொற்று இன்னும் முடிவுக்கு வரவில்லை. ஆனால் முடிவிற்கு வருவதற்கான அறிகுறி உள்ளது” இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.