கொழும்பு பொது மருத்துவமனையில் கடமையாற்றும் மருத்துவர்கள் தாதிகளுக்கு கொரோனாவில் இருந்து பாதுகாக்க போதிய பாதுகாப்பு வசதிகளை வைத்தியசாலை நிர்வாகம் செய்யவில்லை என்று குற்றம்சாட் டப்பட்டுள்ளது .
வைத்தியசாலையின் வெளிநோயாளர் பகுதியில் கடமையாற்றும் வைத்தியர்கள் தாதியர்களுக்கு தனியே முக கவசங்கள் மட்டும் போதுமென வைத்தியசாலை நிர்வாகம் தெரிவித்துள்ளமையால் பொது வைத்தியர்கள் விசனமடைந்துள்ளனர் .
தமக்கான பாதுகாப்பு ஆடைகளை ஏற்பாடு செய்து தாராமை தமக்கு வருத்தமளிப்பதால் முழுமனசுத்தியுடன் பணிபுரியும் சூழல் இல்லாதிருப்பதாக தெரிவித்துள்ளனர் .
வைத்தியசாலையின் நுண்கிருமிகள் விசேட நிபுணரும் ,நிர்வாகத்தினரும் மருத்துவர்கள் தாதியர் தொடர்பில் கவனமெடுக்காமை வருத்தமளிக்கிறது .
தற்போது தமக்கான பாதுகாப்பு ஆடைகளை மருத்துவர்கள் தமது சொந்த செலவில் வடிவமைத்து தைத்து போட்டுக்கொள்ளும் முடிவுக்கு வந்துள்ளதாக அறியமுடிகின்றது .

