கொழும்பின் பல பகுதிகளில் இன்று 9 மணித்தியாலங்களிற்கு நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.
அவசர திருத்தப் பணிகளுக்காக இன்று காலை 9 மணிமுதல் மாலை 6 மணிவரை நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.
இதன்பிரகாரம், கொழும்பு – 5 மற்றும் கோட்டை மாநகர சபை பகுதிகளில் இன்று நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.
அத்துடன், கொழும்பு – 4, கொழும்பு – 6, கொழும்பு – 7 மற்றும் கொழும்பு – 8 ஆகிய பகுதிகளிலும் மஹரகம மற்றும் பொரலஸ்கமுவ நகர சபைகளுக்குட்பட்ட பகுதிகளிலும் குறைந்த அழுத்தத்துடன் நீர் விநியோகிக்கப்படும் எனவும் தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபை குறிப்பிட்டுள்ளது.

