Tuesday, August 26, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

கொள்ளையர்களுடன் ஏற்ப்பட்ட மோதலில் பொலிஸ் அதிகாரி பலி

March 25, 2018
in News, Politics, World
0

மட்டக்களப்பு – மைலம்பாவெளி ஆலய வழிப்பாட்டிற்கு நேற்று காரில் சென்று வரும் போது கொள்ளையர் குழு ஒன்று கொள்ளையடிக்க முற்பட்ட போது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் பொலிஸ் அதிகாரி ஒருவர் பலியாகியுள்ளார்.யாழ்ப்பாணம் சாவக்கச்சேரி பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றி வரும் குருநாகல் – அலாவத்தை பிரதேசத்தைச் சேர்ந்த பொலிஸ் பரிசோதகர் எம்.ஹேரத் என்பவரே சம்பவத்தில் உயிரிழந்துள்ளார்.

இச் சம்பவம் பற்றி மேலும் தெரிய வருகையில்,

உயிரிழந்த குறித்த பொலிஸ் அpதகாரி சாவக்கச்சேரியிலுள்ள அவரது குடும்ப நண்பர்களுடன் மட்டக்களப்பிற்கு ஆலயங்களை வழிப்பாடு செய்ய நேற்று முன் தினம் கார் ஒன்றில் புறப்பட்டுச் சென்று மட்டக்களப்பிலுள்ள விடுதி ஒன்றில் தங்கியிருந்துள்ளார்.

நேற்று மாலை 5.30 மணியளவில் ஏறாவூர் பொலிஸ் பிரிவில் உள்ள மைலம்பாவெளி ஆலயத்திற்கு சென்று வழிப்பாடுகளை முடித்து விட்டு ஆலயத்திற்கு முன்னாள் உள்ள வீதியில் நிறுத்தி வைக்கப்பட்டிந்த காரில் ஏறு முற்பட்ட போது கொள்ளையர் குழு ஒன்று கூரிய ஆயுதங்களை காட்டி அவர்களிடமிருந்து பணம் நகைகளை கொள்ளையிட முயற்சித்த போது மோதல் ஏற்பட்டுள்ளது.

இம் மோதலில் பொது மக்களும் இணைந்து கொள்ளையர்கள் மூவரை மடக்கிப் பிடித்ததோடு கொள்ளையர்களின் தாக்குதலுக்குள்ளான பொலிஸ் அதிகாரியை மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.

குறித்த பொலிஸ் அதிகாரியை வைத்தியசாலை அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதித்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட போதிலும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

பொது மக்களால் மடக்கி பிடிக்கப்பட்ட கொள்ளையர்கள் மூவரும் ஏறாவூர் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

மடக்கி பிடிக்கப்பட்ட கொள்ளையர்கள் ஏறாவூர் தன்னாமுனையைச் சேர்ந்தவர்கள் எனவும் கொள்ளைக்கு பயன் படுத்திய மோட்டார் சைக்கிள் ஒன்றையும் கூரிய ஆயதங்களை மீட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

குறித்த சம்பவம் தொட்ரபான மேலதிக விசாரணைகளை ஏறாவூர் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

சம்பவத்தில் உயிரிழந்த பொலிஸ் அதிகாரியின் உடல் பிரேத பிரசோதனைக்கு பின்னர் உறவினர்களிடம் ஒப்படைக்கப்படும் என மட்டக்களப்பு வைத்தியசாலை பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

Previous Post

பேருந்து நிலையத்தில் காத்திருந்த பாடசாலை மாணவிக்கு நேர்ந்த விபரீதம்

Next Post

மஹசொன் அமித் வீரசிங்கவின் சுகம் விசாரித்த ஞானசார தேரர்

Next Post

மஹசொன் அமித் வீரசிங்கவின் சுகம் விசாரித்த ஞானசார தேரர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures