இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி மேலும் இருவர் இன்று அடையாளம் காணப்பட்டுள்ளனர். இதையடுத்து தொற்றுக்குள்ளாகியவர்களின் எண்ணிக்கை 233 இலிருந்து 235 ஆக உயர்ந்துள்ளது,
இதேவேளை, தொற்றுக்குள்ளான மேலும் இருவர் இன்று குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
அதற்கமைய கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 61 இலிருந்து 63 ஆக அதிகரித்துள்ளது.
இதுவரை 07 பேர் உயிரிழந்துள்ள நிலையில், 165 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதேவேளை, கொரோனா வைரஸ் சந்தேகத்தில் 144 பேர் வைத்தியசாலைகளில் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர்.

