Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

கொரோனா தொற்று; முதலாவது இலங்கையர் அடையாளம் காணப்பட்டு இன்றுடன் 4 மாதங்கள்

July 11, 2020
in News, Politics, World
0

கொவிட்-19 தொற்றுறுதியான முதலாவது இலங்கையர் அடையாளம் காணப்பட்டு இன்றுடன் 4 மாதங்கள் ஆகியுள்ளன.

கடந்த மார்ச் மாதம் 11 ஆம் திகதி சுற்றுலா வழிகாட்டியான இலங்கையர் ஒருவருக்கு கொவிட்-19 தொற்றுறுதியானது.

இந்த நிலையில், நாட்டில் நேற்றைய தினம் 300 பேருக்கு கொவிட்-19 தொற்றுறுதியானது.

இலங்கையில் நாளொன்றில் அதிகளவான கொரோனா தொற்றுறுதியானவர்கள் அடையாளம் காணப்பட்ட தினமாக நேற்றைய தினம் பதிவானது.

போதைப்பொருளுக்கு அடிமையானவர்களை புனர்வாழ்வுக்கு உட்படுத்தும் கந்தக்காடு புனர்வாழ்வு மையத்தில் நேற்றைய தினம் 283 பேருக்கு கொவிட்-19 தொற்றுயதியானது.

இதேநேரம், நேற்று முன்தினம் 56 பேருக்கு தொற்றுறுதியாகியிருந்தது.

இதற்கமைய, கந்தக்காடு புனர்வாழ்வு மையத்தில் இதுவரையில் 339 பேருக்கு கொவிட்-19 தொற்றுறுதியாகியுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதேநேரம், நேற்றைய தினம் இந்தியாவிலிருந்து நாடுதிரும்பிய 9 பேருக்கும், பாகிஸ்தானிலிருந்து நாடுதிரும்பிய ஒருவருக்கும், ஐக்கிய அரபு இராச்சியத்தில் இருந்து நாடுதிரும்பிய 3 பேருக்கும் கொவிட்-19 தொற்றுறதியானது.

அத்துடன், கந்தக்காடு புனர்வாழ்வு மையத்தில் தொற்றுறுதியான ஒருவருடன் தொடர்பிலிருந்த மேலும் 3 பேருக்கு கொவிட்-19 தொற்றுறுதியானதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்தது.

இதற்கமைய, நாட்டில் இதுவரையில் தொற்றுதியானவர்களின் மொத்த எண்ணிக்கை 2 ஆயிரத்து 454 ஆக அதிகரித்துள்ளது.

ஆயிரத்து 980 பேர் பூரண குணமடைந்துள்ள நிலையில், சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை 463 ஆக அதிகரித்துள்ளது.

இதேவேளை. வட மாகாணத்தில் 7 குடும்பங்களை சேர்ந்த 28 பேர் சுயதனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ஆ.கேதீஸ்வரன் இது தொடர்பான விபரங்களை எமது செய்திச் சேவைக்கு வழங்குகிறார்.

இதேவேளை, கொவிட்-19 தொற்றுறுதியானவர்கள் நாட்டில் பல்வேறு பாகங்களில் அடையாளம்காணப்படுவதாக சமூக ஊடகங்களில் உண்மைக்கு புறம்பான தகவல்களை வெளியிடுபவர்கள் தொடர்பில் கடுமையான சட்ட நடடிக்கைகளை மேற்கொள்ள உள்ளதாக காவல்துறை பேச்சாளர் ஜாலிய சேனாரட்ன தெரிவித்துள்ளார்.

Previous Post

பலாலி தனிமைப்படுத்தல் முகாமிலிருந்து 100 பேர் விடுவிப்பு

Next Post

தபால் மூல வாக்களிப்பு திங்கட்கிழமை ஆரம்பம்!!

Next Post

தபால் மூல வாக்களிப்பு திங்கட்கிழமை ஆரம்பம்!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures