நாட்டில் நேற்றைய தினம் 2,959 பேருக்கு கொவிட்-19 தொற்று உறுதியாகியுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.
இவர்களில் வெளிநாடுகளிலிருந்து நாடு திரும்பிய 14 பேரும் உள்ளடங்குவதாக தெரிவித்துள்ளது.
புத்தாண்டு கொத்தணியில் மாத்திரம் நேற்றைய தினம் 2,945 பேருக்கு கொவிட்-19 தொற்று உறுதியானதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதற்கமைய, நாட்டில் இதுவரை கொவிட்19 தொற்று உறுதியானவர்களின் மொத்த எண்ணிக்கை 164,201 ஆக உயர்வடைந்துள்ளது.
அதேநேரம், நாட்டில் கொவிட்-19 தொற்றினால் பீடிக்கப்பட்டிருந்த மேலும் 1,612 பேர் நேற்று குணமடைந்துள்ளனர்.
இதற்கமைய, நாட்டில் இதுவரை கொவிட்-19 தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 128,607ஆக அதிகரித்துள்ளது.
இந்நிலையில் 34,416 பேர் தொடர்ந்தும் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.