Tuesday, August 26, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

கொரோனா கால பணி விசாவை ரத்து செய்யும் ஆஸ்திரேலியா: இந்தியா உள்ளிட்ட வெளிநாட்டு மாணவர்களுக்கு பாதிப்பா? 

May 24, 2023
in News, Sri Lanka News, முக்கிய செய்திகள்
0
படகுகள் மூலம் அவுஸ்திரேலியா செல்ல முயலும் இலங்கையர்களிற்கு அவுஸ்திரேலிய பிரதமர் தெரிவித்துள்ள செய்தி என்ன?

சப்கிளாஸ் 408 அல்லது கோவிட் பணி விசாவை ஆஸ்திரேலியா ரத்து செய்ய திட்டமிட்டுள்ள நிலையில், இது குறிப்பிடத்தக்க அளவிலான இந்திய மாணவர்களையும் தற்காலிக தொழிலாளர்களையும் பாதிக்கும் எனக் கருதப்படுகிறது. 

இந்த 408 விசா என்பது தற்காலிக பணி விசா என்றும் கூறப்படுகிறது. ஆஸ்திரேலியாவில் பணியில் இருந்தால் அல்லது முக்கிய துறையில் பணியாற்றுவதற்கான பணிவாய்ப்பை கொண்டிருந்தால் விண்ணப்பிக்கும் வெளிநாட்டவர்கள் அவ்விசாவில் பணியாற்ற அனுமதிக்கப்பட்டு வந்தனர். 

கொரோனா கால எல்லைக் கட்டுப்பாடுகளால் ஆஸ்திரேலியாவை விட்டு வெளியேற முடியாமல் தவித்து வந்த வெளிநாட்டு மாணவர்களுக்காக இவ்விசா முதலில் அறிமுகப்படுத்தப்பட்டது. விசா காலாவதியான மாணவர் 12 மாதங்கள் வரை கூடுதலாக ஆஸ்திரேலியாவில் இருக்க இவ்விசா அனுமதித்தது. 

கொரோனாவால் பாதிக்கப்பட்ட பொருளாதாரத்தை மீட்கும் நடவடிக்கையாக இந்த விசா நீட்டிக்கப்படுவதாக கடந்த மார்ச் 2022ல் ஆஸ்திரேலிய உள்துறை அறிவித்திருந்தது. 

வரும் ஜூலை 1ம் தேதி முதல், புதிய பணிநேர கட்டுப்பாட்டை(15நாட்களில் 48 மணிநேரம் வரை பணியாற்றலாம்) வெளிநாட்டு மாணவர்களுக்கு ஆஸ்திரேலிய அரசு நடைமுறைக்கு கொண்டு வரவிருக்கும் நிலையில் இந்த விசா ரத்து முக்கியத்துவமிக்கதாக பார்க்கப்படுகிறது. 

கோவிட் பணி விசா வெளிநாட்டு மாணவர்கள் நேர அளவின்றி பணியாற்ற அனுமதித்த நிலையில், தற்போதைய பணி நேர கட்டுப்பாடு அவர்களது வருமானத்தை குறைக்கும் எனக் கூறப்பட்டுள்ளது. அதே சமயம், வயது முதிர்ந்தவர்களுக்கான பராமரிப்பு பணியில் இருக்கும் வெளிநாட்டு மாணவர்களுக்கு இந்தாண்டு டிசம்பர் 31வரை விலக்களிக்கப்பட்டுள்ளது. 

“இந்த விசாவை முடிவுக்கு கொண்டு வருவது வெளிநாட்டு மாணவர்கள் உள்ளிட்ட பலரை பாதிக்கும். அத்துடன் அவர்கள் ஆஸ்திரேலியாவில் தொடர்ந்து வசிக்க வேறு விசா வழியை தேட வேண்டியிருக்கும், இந்த விசாவுக்கு கட்டணமும் செலுத்த வேண்டும்,” எனக் கூறியுள்ள புலம்பெயர்வு வல்லுநரான சுமன், கோவிட் பணி விசா இலவசமாக வழங்கப்பட்டு வந்தது எனக் குறிப்பிட்டுள்ளார். —

Previous Post

கனடாவில் ஈழத்தை ஸ்தாபித்துக் கொள்ளலாம் | சரத் வீரசேகர

Next Post

ஈழத்தமிழ் மாணவன் அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவன போட்டியில் சாதனை

Next Post
ஈழத்தமிழ் மாணவன் அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவன போட்டியில் சாதனை

ஈழத்தமிழ் மாணவன் அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவன போட்டியில் சாதனை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures