Monday, August 25, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

கொரோனாவுக்கு பின் நீரிழிவு நோயாளிகள் அதிகரித்திருக்கிறார்களா?

May 23, 2022
in News, Sri Lanka News, முக்கிய செய்திகள்
0
மேலும் 2,663 புதிய கொரோனா தொற்றாளர்கள் அடையாளம்

கொரோனாத் தொற்று பாதிப்பிற்கு பிறகு எம்மில் பலரும் புதிதாக சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள் என அண்மைய ஆய்வின் மூலம் கண்டறியப்பட்டிருக்கிறது. இதற்கான காரணத்தையும் மருத்துவர்கள் விவரிக்கிறார்கள்.

எம்முடைய உடலிலுள்ள கணையத்தில் அமையப்பெற்றிருக்கும் ஐஸ்லெட் எனும் செல்களில் இன்சுலினை சுரக்கும் பீட்டா செல்கள் உள்ளன.

ரத்த சர்க்கரையின் அளவை சீராக பராமரிப்பதே இன்சுலினின் பிரதான செயல்பாடாகும். பல்வேறு காரணங்களால் பீட்டா செல்கள் சேதமடைவதால் இன்சுலின் சுரப்பில் தடை ஏற்பட்டு, டைப் 1 நீரிழிவு நோய் ஏற்படுகிறது.

பீட்டா செல்களின் எண்ணிக்கை குறைவு காரணமாகவும், இன்சுலின் சுரப்பில் சமச்சீரற்ற தன்மை ஏற்படுவதாலும் டைப் 2 சர்க்கரை நோய் உண்டாகிறது.

கொரோனாத் தொற்று பாதிப்பின் போது சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ரத்த சர்க்கரையின் அளவு கட்டுப்பாடின்மையால் அவை பாதகமாக மாற்றம் பெறுகிறது.

அதே தருணத்தில் கொரோனாத் தொற்றின் காரணமாக உடலில் அதிக அளவு சைட்டோகைன் எனப்படும் புரதத்தின் உற்பத்தி அதிகரிக்கிறது.

இதனால் சர்க்கரையின் அளவு, இயல்பான அளவைவிட கூடுதலாக உயர்வடைகிறது. மேலும் சிலருக்கு கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்ட தருணத்தில் ஸ்டீராய்டு மருந்துகளை பயன்படுத்தி முழுமையான நிவாரணத்தை பெற்றிருப்பார்கள்.

இதன் காரணமாகவும் ரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகரிக்கும். இவ்விரண்டு காரணங்களால் கொரோனாப் பாதிப்பிலிருந்து மீண்யவர்களில் பலருக்கும் புதிதாக சர்க்கரை நோய் ஏற்பட்டிருக்கிறது. இதனை ஆய்வின் மூலம் உறுதிப்படுத்தப்பட்டிருக்கிறது.

இதன் காரணமாக தொற்று பாதிப்பிற்கு பிறகு அதிகமாக சிறுநீர் கழித்தல், அதிக தாகம், அதிக பசி, திடீர் உடல் எடை குறைவு போன்ற அறிகுறிகள் தோன்றினால், உடனடியாக மருத்துவரை சந்தித்து, அவரின் பரிந்துரையின் பேரில் ரத்த அளவு குறித்த பரிசோதனைகளை மேற்கொண்டு ரத்த சர்க்கரையின் அளவை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும்.

டொக்டர் ராஜேஷ் கிருஷ்ணன்

தொகுப்பு அனுஷா.

Previous Post

பிரதமர் ரணில் எடுத்துள்ள முக்கிய முடிவு!

Next Post

சாதாரணதர பரீட்சைகள் இன்று ஆரம்பம்.

Next Post
சாதாரணதர பரீட்சைகள் இன்று ஆரம்பம்.

சாதாரணதர பரீட்சைகள் இன்று ஆரம்பம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures