Sunday, August 24, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

கைது செய்யப்படும் அச்சத்தில் அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன்! சிங்கள ஊடகம் தகவல்.

July 28, 2017
in News, Politics
0
கைது செய்யப்படும் அச்சத்தில் அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன்! சிங்கள ஊடகம் தகவல்.

வாக்குமூலம் ஒன்றை பதிவு செய்து கொள்வதற்காக இன்றையதினம் குற்ற விசாரணை பிரிவிற்கு வருமாறு இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரனுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.

எனினும் தான் கைது செய்யப்படும் கூடும் என்ற காரணமாக வேறொரு திகதிக்கு மாற்றிக் கொண்டதாக சிங்கள ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.

அதற்கிணங்க எதிர்வரும் திங்கட்கிழமைக்கு மாற்றி கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

வித்தியா கொலை வழக்கின் பிரதான சந்தேக நபரான சுவிஸ் குமாரை, விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் லலித் ஜயசிங்க விடுவித்த சம்பவம் தொடர்பில் அவரிடம் விசாரணை மேற்கொள்வதற்காக விஜயகலா அழைக்கப்பட்டிருந்தார்.

விஜயகலா மகேஸ்வரன் மற்றும் கொழும்பு சட்டபீட பேராசிரியர் தமிழ்மாறனிடம் வாக்குமூலம் பெற்றுக்கொள்ளுமாறு ஊர்காவற்துறை நீதிபதி மொஹமட் மிலால் கடந்த செவ்வாய்க்கிழமை குற்றப்புலனாய்வுப் பிரிவினருக்கு உத்தரவிட்டிருந்தார்.

அதற்கமைய நேற்றையதினம் தமிழ் மாறன் குற்றப்புலனாய்வுப் பிரிவிற்கு அழைக்கப்பட்டிருந்த நிலையில் அவரிடம் வாக்குமூலம் ஒன்று பதிவு செய்து கொள்ளப்பட்டுள்ளது. புங்குடுதீவில் பிறந்த நபரான தமிழ் மாறனிடம் சுவிஸ் குமாரை காப்பாற்றுமாறு இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரனினாலே ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.

அப்போதைய யாழ் மாவட்ட சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் லலித் ஜயசிங்க, தமிழ் மாறநனின் கீழ் கொழும்பு பல்கலைக்கழகத்தில் மனிதாபிமான சட்டம் தொடர்பில் கற்று வந்ததனை நன்கு அறிந்த விஜயகலா மகேஸ்வரன் இதனை சாதகமாக பயன்படுத்தி கொண்டு சுவிஸ் குமாரை பாதுகாப்பதற்கு நடவடிக்கை மேற்கொண்டுள்ளார்.

குற்ற விசாரணை பிரிவினரால் இதற்கு முன்னர் விஜயலாவிடம் வாக்குமூலம் ஒன்று பெற்றுள்ள போதிலும் இந்த தொடர்பை அவர் தனது அரசியல் பலத்தை பயன்படுத்தி மறைத்துள்ளதாக குறித்த ஊடகம் மேலும் தகவல் வெளியிட்டுள்ளது.

Previous Post

த.தே.கூ – ந.தே.மு. சந்திப்பு: முல்லைத்திவில் முஸ்லிம்களின் மீள்குடியேற்றம் தொடர்பில் பேச்சுவார்த்தை.

Next Post

கனடாவில் ஆட்கடத்தல் குற்றச்சாட்டை எதிர்நோக்கிய நான்கு ஈழ தமிழர்கள் விடுதலை!

Next Post

கனடாவில் ஆட்கடத்தல் குற்றச்சாட்டை எதிர்நோக்கிய நான்கு ஈழ தமிழர்கள் விடுதலை!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures