Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home Sports

கோலி 156 நாட் அவுட்; இந்தியா முதல் நாளில் 371 ரன்கள் குவிப்பு

December 2, 2017
in Sports
0
கோலி 156 நாட் அவுட்; இந்தியா முதல் நாளில் 371 ரன்கள் குவிப்பு

டெல்லியில் நடந்து வரும் இலங்கை அணிக்கு எதிராக மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி முதல் நாள் ஆட்ட நேர முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 371 ரன்கள் குவித்துள்ளது. முரளி விஜய் 155 ரன்கள் அடித்து ஆட்டமிழந்தார். கேப்டன் கோலி 156 ரன்கள் விளாசி களத்தில் இருக்கிறார்.

முதல் டெஸ்ட் போட்டி டிரா; இரண்டாவது டெஸ்ட் போட்டி கைநழுவியபோனது. கடைசி டெஸ்ட் போட்டியிலாவது வெற்றி பெற வேண்டும் என்ற முனைவில் இருக்கிறது இலங்கை அணி. இரண்டாவது போட்டியில் வெற்றி; மூன்றாவது போட்டியில் வெற்றிபெற்று தொடரைக் கைப்பற்ற வேண்டும் என்ற முடிவில் இருக்கிறது இந்திய அணி. கடைசி டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற கேப்டன் கோலி முதலில் பேட்டிங்கைத் தேர்வு செய்தார்.

முரளி விஜய் – தவான் தொடக்க வீரர்களாகக் களமிறக்கப்பட்டனர். ஒருநாள் போட்டியைப்போல் விளையாட நினைத்த தவான் 35 பந்தில்
25 ரன்கள் எடுத்திருந்த நிலையில் பெரைரா பந்தில் லக்மாலிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். தவான் நான்கு பவுண்டரிகள் அடித்தார். அடுத்து புஜாரா வந்தார். இவர் சிறிது நேரம்கூட நிலைத்து நின்று விளையாடவில்லை. 39 பந்தில் 23 ரன் எடுத்திருந்த புஜாரா, ஹமேஜ் பந்தில் சமரவிக்ரமாவிடம் பிடிபட்டு ஆட்டமிழந்தார்.

மறுமுனைவில் விளையாடிய முரளி விஜய் அரை சதம் விளாசினார். கேப்டன் கோலி களமிறங்கிய பின்னர், ஆட்டத்தின் போக்கு மாறியது. இரண்டு பேரும் சேர்ந்து ரன் விகிதத்தை உயர்த்தினர். இந்த டெஸ்ட் தொடரில் இரண்டாவது சதத்தை அடித்த முரளி விஜய் தனது 11வது சதத்தை நிறைவு செய்தார். 267 பந்துகளைச் சந்தித்த முரளி விஜய் 155 ரன்கள் அடித்தார். இதில் 13 பவுண்டரிகள் அடங்கும். அணியின் ரன் எண்ணிக்கை 361 ஆக இருந்தபோது விஜய் ஆட்டம் இழந்தார். இவரது விக்கெட்டை சண்டகன் கைப்பற்றினார். கேப்டன் கோலியும் தனது பங்குக்கு சதம் விளாசினார். இது இவரின் 20 வது சதமாகும்.

அடுத்து வந்த ரஹானே வந்த வேகத்தில் பெவிலியன் திரும்பினார். 5 பந்துகளைச் சந்தித்து 1 ரன்னில் இருந்தபோது ரஹானே விக்கெட்டை சண்டகன் வீழ்த்தினார். பின்னர், ரோஹித் சர்மா களம் கண்டார். இவர் 6 ரன்னிலும் கோலி 156 ரன்னிலும் களத்தில் உள்ளனர். முதல்நாள் ஆட்ட நேர முடிவில் இந்திய அணி 4 விக்கெட்டுகளை இழந்து 371 ரன்கள் குவித்துள்ளது. நாளை இரண்டாவது நாள் ஆட்டம் தொடர்கிறது. இலங்கை தரப்பில் சண்டிகன் 2 விக்கெட்டும் ஹமேஜ், பெரைரா தலா ஒரு விக்கெட்டும் கைப்பற்றினர்.

Previous Post

ஒரு டெஸ்ட் தொடர்: ஓர் இரட்டை சதம்; 2 செஞ்சுரி! அசரவைத்த விராட் கோலி

Next Post

ஸ்மித், வில்லி ஃப்ளாப்…விராட் கோலி டாப்

Next Post
ஸ்மித், வில்லி ஃப்ளாப்…விராட் கோலி டாப்

ஸ்மித், வில்லி ஃப்ளாப்...விராட் கோலி டாப்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

50,000 டொலர்களுக்கு மேலாக சரவணபவன் என்ற உணவகத்தின் சார்பாக அதன் தலைவர் மாண்புமிகு திரு கணேஷன் சுகுமார் அவர்கள் வைத்தியசாலை அதிகாரிகளிடம் அந்த நிதி உதவியினை வழங்கியிருப்பதனையும் இவ்வாறான நிதி அன்பளிப்பு செய்யும் நடவடிக்கை தொடர்ந்து சரவணபவன் என்ற உணவகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவது பாராட்டுதல்களுக்குரியதாகும்.

கனடாவில் மட்டுமன்றி உலகளாவியரீதியில் பல கிளை நிறுவனங்களை கொண்ட Skymoon Travels and Tours என்ற நிறுவனத்தின் உரிமையாளரும் பிரபல தொழில் அதிபருமான Andrew அவர்களின் அதீத ஆசையின் பிரகாரமே LUCID NIGHTSஇசைக்குழு என்ற ஆரம்பிக்கப்பட்டது.

கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

கொரோனா தொற்று பாதிப்புக்கு பிறகு அதிகரிக்கும் சர்க்கரை நோய், ஞாபக மறதி, சுவாச பிரச்சினைகள் | அப்போலோ மருத்துவர்கள்

தீபச்செல்வனின் நூல்கள் தடுப்பு – மனித உரிமைகள் ஆணைக்குழுவில் விசாரணை

தீபச்செல்வனின் நூல்கள் தடுப்பு – மனித உரிமைகள் ஆணைக்குழுவில் விசாரணை

June 20, 2026
வட்டுக்கோட்டை பிரகடனத்தின் 50ஆவது ஆண்டின் நிறைவு எழுச்சி மாநாடு

வட்டுக்கோட்டை பிரகடனத்தின் 50ஆவது ஆண்டின் நிறைவு எழுச்சி மாநாடு

June 20, 2026
‘சமந்தாவின் ‘எங்கள் தங்கம்’ – வுமன் பவர் அல்ல…டேலன்ட் பவர்’ – நடிகை கௌதமி

‘சமந்தாவின் ‘எங்கள் தங்கம்’ – வுமன் பவர் அல்ல…டேலன்ட் பவர்’ – நடிகை கௌதமி

June 20, 2026
செம்மணி மனிதப் புதைகுழியை பார்வையிட்டார் நீதி அமைச்சர் 

செம்மணி மனிதப் புதைகுழியை பார்வையிட்டார் நீதி அமைச்சர் 

June 20, 2026

Recent News

தீபச்செல்வனின் நூல்கள் தடுப்பு – மனித உரிமைகள் ஆணைக்குழுவில் விசாரணை

தீபச்செல்வனின் நூல்கள் தடுப்பு – மனித உரிமைகள் ஆணைக்குழுவில் விசாரணை

June 20, 2026
வட்டுக்கோட்டை பிரகடனத்தின் 50ஆவது ஆண்டின் நிறைவு எழுச்சி மாநாடு

வட்டுக்கோட்டை பிரகடனத்தின் 50ஆவது ஆண்டின் நிறைவு எழுச்சி மாநாடு

June 20, 2026
‘சமந்தாவின் ‘எங்கள் தங்கம்’ – வுமன் பவர் அல்ல…டேலன்ட் பவர்’ – நடிகை கௌதமி

‘சமந்தாவின் ‘எங்கள் தங்கம்’ – வுமன் பவர் அல்ல…டேலன்ட் பவர்’ – நடிகை கௌதமி

June 20, 2026
செம்மணி மனிதப் புதைகுழியை பார்வையிட்டார் நீதி அமைச்சர் 

செம்மணி மனிதப் புதைகுழியை பார்வையிட்டார் நீதி அமைச்சர் 

June 20, 2026
  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures