Wednesday, August 27, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

கோபா குழுவின் தலைவராகப் பேராசிரியர் திஸ்ஸ விதாரண மீண்டும் தெரிவு

February 10, 2022
in News
0
கோபா குழுவின் தலைவராகப் பேராசிரியர் திஸ்ஸ விதாரண மீண்டும் தெரிவு

ஒன்பதாவது பாராளுமன்றத்தின் இரண்டாவது கூட்டத்தொடருக்கான அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழுவின் (கோபா) தலைவராகப் பாராளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் திஸ்ஸ விதாரண தெரிவுசெய்யப்பட்டார்.

பாராளுமன்ற வளாகத்தில் இன்று (10) கூடிய அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழுவில் இராஜாங்க அமைச்சர் தயாசிறி ஜயசேகர பாராளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் திஸ்ஸ விதாரணவின் பெயரை முன்மொழிந்ததுடன், பாராளுமன்ற உறுப்பினர் அஸோக அபேசிங்ஹ வழிமொழிந்தார்.

பேராசிரியர் திஸ்ஸ விதாரண ஒன்பதாவது பாராளுமன்றத்தின் முதலாவது கூட்டத்தொடரில் அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழுவின் தலைவராகக் கடமையாற்றியிருந்தார்.

பாராளுமன்றத்தின் 119 (1) நிலையியற் கட்டளைக்கு அமைய இந்தக் குழுவுக்கான உறுப்பினர்கள் அண்மையில் தெரிவுக்குழுவினால் நியமிக்கப்பட்டனர்.

இதன்படி, அமைச்சர் உதய கம்மன்பில, இராஜாங்க அமைச்சர்களான துமிந்த திஸாநாயக்க, தயாசிறி ஜயசேகர, லசந்த அழகியவன்ன, வைத்தியகலாநிதி சுதர்ஷினி பெர்னாந்துபுள்ளே, ஷெஹான் சேமசிங்க, பிரசன்ன ரணவீர, பாராளுமன்ற உறுப்பினர்களான திஸ்ஸ அத்தநாயக்க, ஹரின் பெர்னாந்து, நிரோஷன் பெரேரா, அஸோக அபேசிங்ஹ, புத்திக பத்திறண, கே. காதர் மஸ்தான், மொஹமட் முஸம்மில், சிவஞானம் சிறீதரன், ஹேஷா விதானகே, வைத்தியகலாநிதி உபுல் கலப்பத்தி, பீ.வை.ஜீ. ரத்னசேக்கர, வீரசுமன வீரசிங்ஹ, பேராசிரியர் ரஞ்சித் பண்டார, கலாநிதி ஹரினி அமரசூரிய ஆகியோர் ஏனைய உறுப்பினர்களாவர்.

அரசாங்கச் செலவுகளை எதிர்நோக்குவதற்காகப் பாராளுமன்றத்தால் வழங்கப்பட்ட ஒதுக்கீட்டுத் தொகைகளைக் காட்டுகின்ற கணக்குகளையும் குழு தனக்கெனக் கருதும் பாராளுமன்றத்தின் முன்னிடப்படும் பிற கணக்குகளையும் கணக்காய்வாளர் தலைமையதிபதியின் உதவியுடன் பரிசோதனை செய்வது அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழுவின் கடைமையாகும்.

இன்றைய கூட்டத்தில் அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழுவின் உறுப்பினர்களான இராஜாங்க அமைச்சர்களான துமிந்த திசாநாயக, தயாசிறி ஜயசேகர, ஷெஹான் சேமசிங்க, பிரசன்ன ரணவீர, பாராளுமன்ற உறுப்பினர்களான திஸ்ஸ அத்தநாயக்க, நிரோஷன் பெரேரா, அஸோக அபேசிங்ஹ, மொஹமட் முஸம்மில், சிவஞானம் சிறீதரன், வைத்தியகலாநிதி உபுல் கலப்பத்தி, பீ.வை.ஜீ. ரத்னசேக்கர, வீரசுமன வீரசிங்ஹ, பேராசிரியர் ரஞ்சித் பண்டார ஆகியோர் கலந்துகொண்டனர்.

Previous Post

வடக்கு கிழக்கை சிதைக்க அதிர வைக்கும் சதி | ஒற்றுமையுடன் எதிர்ப்போம்  | கிருபா பிள்ளை அறைகூவல்

Next Post

சுசீந்திரனின் ‘வீரபாண்டியபுரம்’ இசை வெளியீடு

Next Post
சுசீந்திரனின் ‘வீரபாண்டியபுரம்’ இசை வெளியீடு

சுசீந்திரனின் 'வீரபாண்டியபுரம்' இசை வெளியீடு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures