Sunday, August 24, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

கேரளா வருமாறு போப்பாண்டவருக்கு பினராயி அழைப்பு…!

March 17, 2018
in News, World
0

போப்பாண்டவர் பிரான்சிசை கேரளத்துக்கு வருமாறு அம்மாநில முதல்வர் பினராயி விஜயன் அழைப்பு விடுத்துள்ளார். போப்பாண்டவரை வாடிகனில் சந்தித்து இதுகுறித்த முதல்வரின் கடிதத்தை வழங்கியதாக அமைச்சர் கடகம்பள்ளி சுரேந்திரன் தனது முகநூல் பக்கத்தில் புகைப்படத்துடன் வெளியிட்டுள்ளார்.கேரள மக்கள் சார்பில் போப்பாண்ட வருக்கு அமைச்சர் நினைவுப்பரிசு வழங்கினார். ‘கடவுளின் சொந்த நாட்டுக்கு’ வர விருப்பம் தெரிவித்த போப்பாண்டவர், அன்பான வரவேற்பளித்ததாகவும், கேரளத்தின் சிறப்புகளைப்பற்றி தம்மிடம் கேட்டு அறிந்து கொண்டதாகவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

இந்தியாவுக்கு வர போப்பாண்டவர் விரும்புவதாக ஏற்கனவே செய்திகள் வெளியாகியிருந்தன. கடந்த நவம்பர் மாதம் மியான்மர், வங்கதேசம் உள்ளிட்ட தெற்காசிய நாடுகளுக்கு போப்பாண்டவர் சென்றிருந்தார். அப்போது அவரை இந்தியாவுக்கு வருமாறு அழைக்க வேண்டும் என்று பல்வேறு கிறிஸ்தவ அமைப்புகள் வேண்டுகோள் விடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Previous Post

நண்பனுக்காக காத்திருந்த பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த ஆண்

Next Post

பாஜகவுக்கு எதிராக பிரச்சாரம் : நடிகர் பிரகாஷ்ராஜ் அறிவிப்பு…!

Next Post

பாஜகவுக்கு எதிராக பிரச்சாரம் : நடிகர் பிரகாஷ்ராஜ் அறிவிப்பு…!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures