Wednesday, August 27, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

கேரளா முதல்வரின் பேரிடர் நிவாரண நிதிக்கு ‘சீயான்’ விக்ரம் 20 லட்சம் நன்கொடை

August 2, 2024
in News, Sri Lanka News, முக்கிய செய்திகள்
0
இதிலும் அவர் எனக்கு கிடைக்கவில்லை | நடிகர் விக்ரம்

அநுராதபுரம் பிரதேசத்தில் கடந்த 30 மற்றும் 31 ஆம் திகதிகளில் 5 சிறுவர் பாலியல் துஷ்பிரயோக சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக அநுராதபுரம் பொலிஸ் பிரிவு தெரிவித்துள்ளது.

அதன்படி, அநுராதபுரம், காலதிவுல்வெவ பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் வசிக்கும் 14 வயதுடைய சிறுமியொருவரை ஏமாற்றி பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் 25 வயதுடைய சிறுமியின் காதலன் காலதிவுல்வெவ பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். 

இந்நிலையில், அநுராதபுரம், பரசன்கஸ்வெவ பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் 16 வயதுடைய சிறுமியொருவரை பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் சிறுமியின் தந்தையின் 39 வயதுடைய சகோதரன் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் இந்த சம்பவத்துடன் தொடர்புடைய 50 வயதுடைய சந்தேக நபரொருவரை கைது செய்ய பரசன்கஸ்வெவ பொலிஸார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

மேலும், அநுராதபுரம், தம்புத்தேகம பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் 15 வயதுடைய சிறுமியொருவரை பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் 17 வயதுடைய சிறுவனொருவன் தம்புத்தேகம பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். 

இந்நிலையில், அநுராதபுரம், தம்புத்தேகம பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் 14 வயதுடைய சிறுமியொருவரை பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் சிறுமி கல்வி கற்கும் பாடசாலை அதிபர் உட்பட மூவரை கைது செய்ய தம்புத்தேகம பொலிஸார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

இதேவேளை, அநுராதபுரம், திறப்பனை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் 16 வயதுடைய சிறுமியொருவரை பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் 24 வயதுடைய இளைஞரொருவர் திறப்பனை  பொலிஸாரால்  கைது செய்யப்பட்டுள்ளார். 

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Previous Post

அநுராதபுரத்தில் இரு தினங்களில் 5 சிறுவர் பாலியல் துஷ்பிரயோக சம்பவங்கள் பதிவு

Next Post

இடைக்கால கொடுப்பனவு: ஓய்வூதியர்களுக்கு வெளியான மகிழ்ச்சித் தகவல்

Next Post
எரிபொருளை சிக்கனமாக முகாமைத்துவம் செய்ய வேண்டும் | அரசாங்கம்

இடைக்கால கொடுப்பனவு: ஓய்வூதியர்களுக்கு வெளியான மகிழ்ச்சித் தகவல்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures