சமீபத்தில் முறைகேடாக வரி ஏய்ப்பு செய்து புதுச்சேரியில் கார் வாங்கியதாக அமலாபால் மீது குற்றச்சாட்டு எழுந்தது. குற்றம் நிரூபணமானால் சுமார் ஏழு வருடம் கூட சிறை தண்டனை கிடைக்கலாம் என்றும் சொல்லப்படுகிறது. ஆனால் இதுபற்றியெல்லாம் அலட்டிக்கொள்ளாத அமலாபால் நேற்று கேரளாவின் 61வது பிறந்த தினமாக கொண்டாடப்படும் கேரளா பிறவி நாளில் தனது செல்ல நாய்க்குட்டியுடன் படகு சவாரி செய்து மகிழ்ந்துள்ளார்.
மேலும், “நகரத்தின் கூச்சல்களில் இருந்து ஒதுங்கியிருப்பதற்காக இப்போது ஓட வேண்டி இருக்கிறது. இதற்கு ரெஜிஸ்ட்ரேஷன் தேவையில்லையே. எதற்கும் எனது ‘நலம் விரும்பிகள்’ சோதித்து சொல்லுங்கள்” என தன்னை விமர்சித்தவர்கள் மீது கிண்டலாகவும் ஒரு கருத்தை பதிவு செய்துள்ளார் அமலாபால்.